ஹட்டன் – டிக்கோயா நகரில் உள்ள கடையொன்றில் தனியாக வசித்து வந்த வயோதிப தம்பதியினர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் தொடர்பிலான சீ.சீ.டிவி தொடர்பிலான கானோளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இக்கொலையைச் செய்த நபர் அத்தம்பதியினரிடமிருந்த 18 பவுன் தங்க நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை, நீண்டகாலமாக குறித்த கடையில் வியாபாரம் செய்து, சமீபத்தில் வியாபாரத்தை நிறுத்திவிட்டு அங்கேயே தனியாக வாழ்ந்து வந்த 82 வயதுடைய எஸ். காளிமுத்து சத்திவேல் மற்றும் அவரது மனைவியான 82 வயதுடைய சகுந்தலாதேவி ஆகிய தம்பதியினராவர்.
இவர்களின் பிள்ளைகள் கொழும்பு பகுதியில் வசித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த இரட்டைக்கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபரின் சில CCTV காட்சிகள் பொலிஸாரால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன.
சந்தேகநபர் சம்பவம் நடந்த நாள் காலை முதலே டிக்கோயா பகுதியிலுள்ள தங்க நகைக்கடைகளுக்குச் சென்று அப்பகுதியில் நடமாடியுள்ளதுடன், அவர் கொலை நடந்த கடையை நோக்கி நடைபாதையில் செல்லும் காட்சியும் அதில் பதிவாகியுள்ளது.
இக்குற்றவாளியை விரைவாகக் கைது செய்வதற்கு ஹட்டன் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
சந்தேகநபர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது ஹட்டன் பொலிஸாருக்கோ அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதேவேளை மேற்குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்களுக்கு தகவல்களை வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களை கோரியுள்ளனர் .
* 071-8593163
* 051-2222222
* 071-8591117















