18 வயதான Henry Nowak கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது பெற்றோர் பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு சென்றிருந்தபோது, தங்கள் மகனுக்கு எம்.பி.க்கள் அஞ்சலி செலுத்தியதை கேட்டு நெகிழ்ந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஹென்றியின் பெற்றோர், Houses of Parliament வளாகத்திற்கு விஜயம் செய்தபோது, Kemi Badenoch மற்றும் பிரதமர் Keir Starmer ஆகியோரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது பொதுமக்கள் அரங்கிலிருந்து நாடாளுமன்ற அமர்வை பார்வையிட்டுக் கொண்டிருந்த அவர்கள், தங்கள் மகனின் மரணம் குறித்து எம்.பி.க்கள் மரியாதையுடன் பேசுவதை கேட்டு உணர்ச்சிவசப்பட்டதாக கூறப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் அரசின் சார்பில் பேசிய Alan Campbell மற்றும் எதிர்க்கட்சி தரப்பைச் சேர்ந்த Jesse Norman ஆகியோர் ஹென்றிக்கும் அவரது குடும்பத்தின் உறுதியான மனநிலைக்கும் அஞ்சலி செலுத்தினர்.
ஆனால் அதற்கு முந்தைய நாள் நடைபெற்ற விவாதம் கடுமையான அரசியல் மோதலாக மாறியது. Nigel Farage, பிரிட்டனில் “இரு அடுக்கு காவல் நடைமுறை” (Two-tier policing) இருப்பதாக தனது கருத்தை மீண்டும் வலியுறுத்தினார். இன சிறுபான்மையினரிடம் காவல்துறை மென்மையாக நடந்து கொள்கிறது என்ற அவரது கருத்துக்கு பல எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து நாடாளுமன்றத்தில் “அதை கண்டியுங்கள்”, “அவமானம்” போன்ற முழக்கங்கள் எழுந்ததுடன், கூச்சல் மற்றும் எதிர்ப்பும் நிலவியது. மேலும், Southampton பகுதியில் வெளிப்பட்டுள்ள மக்கள் அதிருப்தி, காவல்துறையின் மீது நம்பிக்கை குறைந்தால் மேலும் மோசமடையக்கூடும் என ஃபாராஜ் எச்சரித்துள்ளார்.
இந்த சம்பவம், ஹென்றி நோவாக் கொலை விவகாரத்தைத் தாண்டி, பிரிட்டனில் காவல்துறை மீதான நம்பிக்கை மற்றும் சமூக ஒற்றுமை குறித்த விவாதங்களையும் மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.















