உக்ரேனும் ரஷ்யாவும் வியாழக்கிழமை (11) இரவு முழுவதும் ஆளில்லா விமானத் தாக்குதல்களைப் பரிமாறிக்கொண்டன.
இந்த தாக்குதல்களில் உக்ரேன், ரஷ்யாவின் ஒரு முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோலிய இரசாயனப் பகுதியைக் குறிவைத்த நிலையில், ரஷ்யா உக்ரேனின் ரயில் நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்யாவின் மத்திய டாடர்ஸ்தான் (Tatarstan ) பகுதியில் அமைந்துள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு மீது உக்ரேன் நடத்திய தாக்குதலில் மூவர் காயமடைந்தனர்.
அதேநேரம், உக்ரேனின் சுமி (Sumy) பகுதியில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் ரயில்வே ஊழியர் ஒருவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அண்மைய வாரங்களில் உக்ரேன் மீது ரஷ்யா நடத்திய பெரிய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன.
அதேநேரத்தில், ரஷ்ய எண்ணெய் நிலையங்கள் மீதான தொலைதூர ஆளில்லா விமானத் தாக்குதல்களை உக்ரேன் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதல்கள் கிரிமியா மற்றும் பிற இடங்களில் எரிபொருள் பற்றாக்குறைக்கு வழிவகுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.















