தமிழ்நாடு சட்டமன்றம் இன்று (18) ‘தமிழ் தாய் வாழ்த்து’ பாடலுடன் நிகழ்வுகளைத் தொடங்கி தேசிய கீதத்துடன் நிறைவு செய்யும் தனது நீண்டகால மரபைப் பின்பற்றியது.
கடந்த மே 10 ஆம் திகதி நடைபெற்ற முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் பதவியேற்பு விழாவில் பாடல்கள் பாடப்பட்ட வரிசை தொடர்பாகப் பெரும் அரசியல் சர்ச்சை எழுந்த ஒரு மாத காலத்திற்குப் பின்னர் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இன்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில், நடவடிக்கைகள் தொடங்குவதற்கு முன்னதாகத் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் இசைக்கப்பட்டது.
அதேவேளையில், பல தசாப்தங்களாக மாநிலத்தில் பின்பற்றப்பட்டு வரும் மரபின்படி தேசிய கீதம் பின்னர் இசைக்கப்பட்டது.
வழக்கமாக, தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகள் ‘தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்குகின்றன; அதேவேளையில், நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது.
இந்த நடைமுறையிலிருந்து விலகிய செயல், எதிர்க்கட்சிகள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவளிக்கும் பல கூட்டணிக் கட்சிகளிடமிருந்து உடனடியாக எதிர்ப்புகளைத் தூண்டியது.
மத்திய உள்துறை அமைச்சு 2026 ஜனவரியில் வெளியிட்ட உத்தரவின்படி, பதவியேற்பு விழாவின்போது ‘வந்தே மாதரம்’ பாடலின் முழுமையான ஆறு சரணங்களும் இசைக்கப்பட்டதால், இந்த சர்ச்சை மேலும் தீவிரமடைந்தது.
234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் விஜய் பெரும்பான்மை பெற உதவிய பல கூட்டணிக் கட்சிகள் இந்த முடிவைக் குறித்து கேள்வி எழுப்பியமையும் குறிப்பிடத்தக்கது.
















