தமிழக வெற்றிக் கழக அரசு தயாரித்துக் கொடுத்த உரையை, ஒரு வரியோ அல்லது ஓர் எழுத்தோ கூட மாற்றாமல் ஆளுநர் அப்படியே வாசித்துள்ளதாகத் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தவெக அரசுக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே நெருக்கமான ஒரு தொடர்பு ஏற்பட்டுவிட்டதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை நிகழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து, பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போதே உதயநிதி ஸ்டாலின் இந்த விமர்சனங்களை முன்வைத்தார்.
பொதுவாக ஆளுநர் உரை என்பது ஆளும் அரசு தயாரித்துக் கொடுக்கும் ஒரு முக்கிய ஆவணமாகும்.
அதில் மக்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான முறையான திட்டங்களும், அதற்கான நிதி ஒதுக்கீடுகளும் இடம்பெற வேண்டும்.
ஆனால், இன்று வாசிக்கப்பட்ட ஆளுநர் உரையானது வெறும் சமூக வலைத்தளங்களில் ‘ரீல்ஸ்’ (Reels) போடுவதற்கான ஒரு ‘கண்டெண்ட்’ போல மட்டுமே அமைந்துள்ளது என அவர் சாடினார்.
தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்றதற்குப் பின்னரான புதிய அரசியல் சூழலில், ஆளுநரின் இந்த அணுகுமுறை மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் இந்த நேரடிக் குற்றச்சாட்டு ஆகியவை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.














