இணைய பண பரிமாற்ற முறைகள் மூலம் பணத்தை வங்கி கணக்குகளில் செலுத்தி நடத்தப்பட்ட போதைப்பொருள் விற்பனை தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் கூறியுள்ளதாவது,
2026.06.21 அன்று காலை, நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுவ பகுதியில, நீர்கொழும்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், இணைய பண பரிமாற்ற முறைகள் மூலம் பணத்தை வங்கி கணக்குகளில் செலுத்தி நடத்தப்பட்ட போதைப்பொருள் விற்பனை தொடர்பான தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ஹேஷ் போதைப்பொருள் 1 கிலோ 34 கிராம், ஐஸ் 7 கிராம் 420 மில்லிகிராம், ஹெரோயின் 8 கிராம் 860 மில்லிகிராம், போதைப்பொருள் விற்பனையிலிருந்து பெற்றதாக சந்தேகிக்கப்படும் ரூ.351,200 பணம் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு கார்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டு நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 29 மற்றும் 31 வயதுடைய கல்கிசை மற்றும் உடுகம்பொல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.















