• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியிருக்கும் பாதாள உலக குழு தலைவர்களை விரைவாகக் கைது செய்ய நடவடிக்கை!

பொசன் தன்சல்கள் மற்றும் தோரணங்களுக்கு பொலிஸ் அனுமதி கட்டாயம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/24
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

எதிர்வரும் பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்படும் தானப் பந்தல்கள் மற்றும் தோரணங்கள் குறித்து, சம்பந்தப்பட்ட பகுதி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு (OIC) முன்கூட்டியே அறிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பு திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், பண்டிகைக் காலங்களில் ஏற்படும் வாகன நெரிசல் மற்றும் விபத்துக்களைத் தடுக்கும் நோக்கிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

பொதுமக்களுக்குக் காட்சிப்படுத்தும் வகையில் தோரணங்கள் அமைப்பதாகவோ அல்லது தன்சல்கள் வழங்குவதாகவோ இருந்தால், அப்பகுதி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் வழிகாட்டல்களைப் பெற்றுக்கொள்வது அவசியமாகும்.

தன்சல்களுக்கு வரும் மக்கள் தங்களது வாகனங்களை எவ்வாறு நிறுத்த வேண்டும் என்பது போன்ற போக்குவரத்து ஒழுங்குவிதிகள் இதில் உள்ளடக்கப்படும்.

நாம் தன்சல்களை நடத்த வேண்டாம் என்று கூறவில்லை. மாறாக, விபத்துக்களைத் தவிர்க்கும் பொருட்டு அவற்றை முறைப்படுத்துமாறுதான் கூறுகிறோம். இதற்குப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் நேரடியாகத் தலையிட்டு உதவுவர்.

வீதிகளில் இடம்பெறும் விபத்துக்கள் குறித்துப் பொலிஸாருக்கு முறைப்படி அறிவிக்காத சாரதிகளுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் எச்சரித்துள்ளார்.

“பல சந்தர்ப்பங்களில் விபத்துக்கள் ஏற்பட்ட பிறகு, சாரதிகள் அதனை வீதியிலேயே பேசித் தீர்த்துக்கொண்டு மறைக்க முயல்கின்றனர். இனிமேல் அனைத்து விபத்துக்களும் கட்டாயம் பொலிஸ் விபத்துப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும் எனப் பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

விபத்து நடந்து 24 மணித்தியாலங்களுக்குள் அது குறித்துப் பொலிஸாருக்கு அறிவிக்கத் தவறினால் அது சட்டப்படி குற்றமாகும். விபத்தை மறைக்கும் சாரதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் வீதி விபத்துக்களின் புள்ளிவிபரங்கள் குறித்தும் அவர் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டார்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பாரதூரமான வீதி விபத்துக்கள் 98 ஆலும், விபத்துக்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 104 ஆலும் அதிகரித்துள்ளது. எனினும், தற்போது எடுக்கப்பட்டு வரும் விசேட நடவடிக்கைகள் காரணமாக வாராந்த அடிப்படையில் விபத்துக்கள் மெல்லக் குறைந்து வருகின்றன.

இதேவேளை, போதைப்பொருள் மற்றும் மதுபானம் பாவித்துவிட்டு ஆபத்தான முறையில் வாகனம் செலுத்திய 7,500 க்கும் மேற்பட்ட சாரதிகள் இந்த வருடத்தில் மாத்திரம் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியூ. பி. ஜே. சேனாதீர மேலும் தெரிவித்துள்ளார்.

Related

Tags: srilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சாரதி பயிற்சிப் பாடசாலைகளுக்கான பொலிஸாரின் அறிவித்தல்!

Next Post

ஆசனப்பட்டிகள் அணியத் தவறிய 400 சாரதிகள், பயணிகள் மீது சட்ட நடவடிக்கை!

Related Posts

ஆசனப்பட்டிகள் அணியத் தவறிய 400 சாரதிகள், பயணிகள் மீது சட்ட நடவடிக்கை!
இலங்கை

ஆசனப்பட்டிகள் அணியத் தவறிய 400 சாரதிகள், பயணிகள் மீது சட்ட நடவடிக்கை!

2026-06-24
சாரதி பயிற்சிப் பாடசாலைகளுக்கான பொலிஸாரின் அறிவித்தல்!
இலங்கை

சாரதி பயிற்சிப் பாடசாலைகளுக்கான பொலிஸாரின் அறிவித்தல்!

2026-06-24
பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!
இலங்கை

பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சை விண்ணப்பங்கள் கோரல்!

2026-06-24
டெங்கு நோய் தொற்றால் இந்த ஆண்டில் 19 உயிரிழப்புகள்!
இலங்கை

நாடு முழுவதும் 06 மாகாணங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு விசேட ஒழிப்புத் திட்டம் ஆரம்பம்!

2026-06-24
‘தலைவர் 173’ படத்தின் தலைப்பு வெளியானது!
சினிமா

‘தலைவர் 173’ படத்தின் தலைப்பு வெளியானது!

2026-06-24
வவுனியாவில் பல வர்த்தக நிலையங்களில் இறைவரி திணைக்கள அதிகாரிகள் திடீர் சோதனை!
இலங்கை

வவுனியாவில் பல வர்த்தக நிலையங்களில் இறைவரி திணைக்கள அதிகாரிகள் திடீர் சோதனை!

2026-06-24
Next Post
ஆசனப்பட்டிகள் அணியத் தவறிய 400 சாரதிகள், பயணிகள் மீது சட்ட நடவடிக்கை!

ஆசனப்பட்டிகள் அணியத் தவறிய 400 சாரதிகள், பயணிகள் மீது சட்ட நடவடிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
ஆசனப்பட்டிகள் அணியத் தவறிய 400 சாரதிகள், பயணிகள் மீது சட்ட நடவடிக்கை!

ஆசனப்பட்டிகள் அணியத் தவறிய 400 சாரதிகள், பயணிகள் மீது சட்ட நடவடிக்கை!

0
நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியிருக்கும் பாதாள உலக குழு தலைவர்களை விரைவாகக் கைது செய்ய நடவடிக்கை!

பொசன் தன்சல்கள் மற்றும் தோரணங்களுக்கு பொலிஸ் அனுமதி கட்டாயம்!

0
சாரதி பயிற்சிப் பாடசாலைகளுக்கான பொலிஸாரின் அறிவித்தல்!

சாரதி பயிற்சிப் பாடசாலைகளுக்கான பொலிஸாரின் அறிவித்தல்!

0
பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சை விண்ணப்பங்கள் கோரல்!

0
கொங்கோவை வீழ்த்தி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய கொலம்பியா!

கொங்கோவை வீழ்த்தி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய கொலம்பியா!

0
ஆசனப்பட்டிகள் அணியத் தவறிய 400 சாரதிகள், பயணிகள் மீது சட்ட நடவடிக்கை!

ஆசனப்பட்டிகள் அணியத் தவறிய 400 சாரதிகள், பயணிகள் மீது சட்ட நடவடிக்கை!

2026-06-24
நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியிருக்கும் பாதாள உலக குழு தலைவர்களை விரைவாகக் கைது செய்ய நடவடிக்கை!

பொசன் தன்சல்கள் மற்றும் தோரணங்களுக்கு பொலிஸ் அனுமதி கட்டாயம்!

2026-06-24
சாரதி பயிற்சிப் பாடசாலைகளுக்கான பொலிஸாரின் அறிவித்தல்!

சாரதி பயிற்சிப் பாடசாலைகளுக்கான பொலிஸாரின் அறிவித்தல்!

2026-06-24
பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சை விண்ணப்பங்கள் கோரல்!

2026-06-24
கொங்கோவை வீழ்த்தி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய கொலம்பியா!

கொங்கோவை வீழ்த்தி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய கொலம்பியா!

2026-06-24

Recent News

ஆசனப்பட்டிகள் அணியத் தவறிய 400 சாரதிகள், பயணிகள் மீது சட்ட நடவடிக்கை!

ஆசனப்பட்டிகள் அணியத் தவறிய 400 சாரதிகள், பயணிகள் மீது சட்ட நடவடிக்கை!

2026-06-24
நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியிருக்கும் பாதாள உலக குழு தலைவர்களை விரைவாகக் கைது செய்ய நடவடிக்கை!

பொசன் தன்சல்கள் மற்றும் தோரணங்களுக்கு பொலிஸ் அனுமதி கட்டாயம்!

2026-06-24
சாரதி பயிற்சிப் பாடசாலைகளுக்கான பொலிஸாரின் அறிவித்தல்!

சாரதி பயிற்சிப் பாடசாலைகளுக்கான பொலிஸாரின் அறிவித்தல்!

2026-06-24
பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சை விண்ணப்பங்கள் கோரல்!

2026-06-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.