சிறுவர் பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட பல்வேறு கொடூரக் குற்றங்களுக்காக ஜனநாயகக் கூட்டியக்கக் கட்சியின் (DUP) முன்னாள் தலைவர் ஜெஃப்ரி டொனால்ட்சன் குற்றவாளியாகக் காணப்பட்டுத் தண்டிக்கப்பட்டுள்ள நிலையில், அக்கட்சியின் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் ஒழுக்கக் கட்டுப்பாட்டு நடைமுறைகள் குறித்து முழுமையான வெளிப்படைத்தன்மை வேண்டும் என வட அயர்லாந்து நாடாளுமன்றத்தின் ஏனைய பிரதான அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து வலியுறுத்தியுள்ளன.
முன்னாள் தலைவர் டொனால்ட்சன், பாலியல் துஸ்பிரயோகம் உள்ளிட்ட 18 குற்றச்சாட்டுகளின் கீழ் கடந்த வாரம் நீதிமன்றத்தினால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார்.
இதேவேளை, இந்த விபரங்கள் தெரிந்திருந்தும், டொனால்ட்சன் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்பதற்கு முன்னதாக அக்கட்சி உரிய பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்றும், குற்றச்சாட்டுகளை மூடிமறைக்க முயன்றதாகவும் தற்போது கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் முழுமையான வெளிப்படைத்தன்மை வேண்டும் என வட அயர்லாந்து நாடாளுமன்றத்தின் ஏனைய பிரதான அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து வலியுறுத்தியுள்ளன.



















