• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வடக்கு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளை வழங்க நடவடிக்கை !

வடக்கு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளை வழங்க நடவடிக்கை !

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/30
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

வட மாகாண கடற்றொழில் இணையத்தின் பிரதிநிதிகளுடன் யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதியில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கலந்துகொண்டு வடக்கு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றிற்கான தீர்வுகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடினார்.

இணையத்தின் உப தலைவர் அன்டனி ஆல்பர்ட் தலைமையில் இடம்பெற்ற இந்த விசேட கலந்துரையாடலில் அமைச்சர் மேலும் கருத்து தெரிவித்ததாவது,

சட்டவிரோத மீன்பிடி, இழுவைமடி தொழில், கரைவலை மீன்பிடி உள்ளிட்ட விடயங்களை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய சட்டமூலங்கள் தயாரிக்கப்பட்டு சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

அங்கிருந்து பெறப்பட்ட திருத்தங்கள் மீளாய்வு செய்யப்பட்டு மீண்டும் அனுப்பப்பட்டுள்ளதுடன், இறுதி அனுமதி கிடைத்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

கடல் அட்டை பண்ணைகள் தொடர்பில் சிறு தொழிலாளர்கள் பாதிக்கப்படாத வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் இராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், ஒளிப்பாய்ச்சு மீன்பிடி போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடலில் காணாமல் போகும் மீனவர்கள் மற்றும் படகுகள் தொடர்பிலும் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருகின்றது.

அவசரகால கடல் மீட்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ஜப்பான் அரசாங்கத்தின் நிதி உதவியுடன் அதிநவீன வசதிகளைக் கொண்ட இரண்டு மீட்புப் ரெஸ்கியூ படகுகள் இவ்வருடத்திற்குள் நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம் கடலில் அவசரநிலைகளுக்கு விரைவாக பதிலளித்து, மீனவர்களின் உயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும்.

காணாமல் போகும் படகுகளுக்கு தொழில்நுட்ப கண்காணிப்பு கருவிகளை பொருத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், இதுதொடர்பில் இலங்கை கடற்படையுடன் கலந்துரையாடி வருகின்றோம்.

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இதுவரை 138 இற்கும் மேற்பட்ட புதிய படகுகள் வழங்கப்பட்டுள்ளதுடன், 100 இற்கும் அதிகமான படகுகள் பழுதுபார்க்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட ஏனைய மீனவர்களுக்கு நஷ்டஈடுகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மண்ணெண்ணெய் மானியம் தொடர்பில், விலை உயர்வை கருத்தில் கொண்டு சிறிய படகுகளுக்கான மானியமாக 25 லீற்றர் வழங்கப்படுவதோடு, பெரிய படகுகளுக்கு 150000 லீற்றர் வழங்கப்பட்டு வருகின்றது.

காலநிலை மாற்றங்களால் மீனவர்கள் எதிர்நோக்கும் பொருளாதார இழப்புகளுக்கான நிவாரண மற்றும் பாதுகாப்பு திட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும், எதிர்காலத்தில் அதற்கான நடைமுறை தீர்வுகள் அறிமுகப்படுத்தப்படும்

மேலும், சிறு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சில தொழில்நுட்ப நடைமுறைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர், மீன்பிடித் துறையை நவீன தொழில்நுட்பத்துடன் முன்னேற்றுவதற்காக நோர்வே மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் ஒத்துழைப்பைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

“கடந்த கால அரசாங்கங்களைப் போன்று அல்லாமல், தற்போதைய அரசாங்கம் மீனவர்களின் வாழ்வாதார பாதுகாப்பையும் அவர்களின் தொழில் முன்னேற்றத்தையும் முதன்மையாகக் கருதுகிறது.

மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நடைமுறை மற்றும் நிலையான தீர்வுகளை வழங்குவதற்காக அரசாங்கம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயல்படும்” என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

blank blank

 

Related

Tags: fisherman issuesanthirasekarsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கைக்கு தொடரும் IMF ஆதரவு – பொருளாதார முன்னேற்றத்திற்கு பாராட்டு

Next Post

IMF தூதுக்குழுவினர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தனர்

Related Posts

லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷியாமிலா பெரேரா கைது!
இலங்கை

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷியாமலா பெரேரா பிணையில் விடுதலை!

2026-06-30
IMF தூதுக்குழுவினர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தனர்
இலங்கை

IMF தூதுக்குழுவினர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தனர்

2026-06-30
இலங்கைக்கு தொடரும் IMF ஆதரவு – பொருளாதார முன்னேற்றத்திற்கு பாராட்டு
இலங்கை

இலங்கைக்கு தொடரும் IMF ஆதரவு – பொருளாதார முன்னேற்றத்திற்கு பாராட்டு

2026-06-30
வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோபுதிய கடற்படைத் தளபதியாக நியமனம்!
இலங்கை

வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோபுதிய கடற்படைத் தளபதியாக நியமனம்!

2026-06-30
பிரதமரை சந்தித்த UNFPA பிரதிநிதிகள் – முக்கிய விடயங்கள் குறித்து பேச்சு
இலங்கை

பிரதமரை சந்தித்த UNFPA பிரதிநிதிகள் – முக்கிய விடயங்கள் குறித்து பேச்சு

2026-06-30
காஞ்சன பானகொடவுக்கு அட்மிரல் பதவி – கடற்படையில் முக்கிய உயர்வு
இலங்கை

காஞ்சன பானகொடவுக்கு அட்மிரல் பதவி – கடற்படையில் முக்கிய உயர்வு

2026-06-30
Next Post
IMF தூதுக்குழுவினர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தனர்

IMF தூதுக்குழுவினர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தனர்

லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷியாமிலா பெரேரா கைது!

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷியாமலா பெரேரா பிணையில் விடுதலை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
edit post
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
edit post
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
edit post
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
edit post
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
edit post
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
edit post
லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷியாமிலா பெரேரா கைது!

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷியாமலா பெரேரா பிணையில் விடுதலை!

0
edit post
IMF தூதுக்குழுவினர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தனர்

IMF தூதுக்குழுவினர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தனர்

0
edit post
வடக்கு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளை வழங்க நடவடிக்கை !

வடக்கு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளை வழங்க நடவடிக்கை !

0
edit post
இலங்கைக்கு தொடரும் IMF ஆதரவு – பொருளாதார முன்னேற்றத்திற்கு பாராட்டு

இலங்கைக்கு தொடரும் IMF ஆதரவு – பொருளாதார முன்னேற்றத்திற்கு பாராட்டு

0
edit post
வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோபுதிய கடற்படைத் தளபதியாக நியமனம்!

வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோபுதிய கடற்படைத் தளபதியாக நியமனம்!

0
edit post
லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷியாமிலா பெரேரா கைது!

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷியாமலா பெரேரா பிணையில் விடுதலை!

2026-06-30
edit post
IMF தூதுக்குழுவினர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தனர்

IMF தூதுக்குழுவினர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தனர்

2026-06-30
edit post
வடக்கு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளை வழங்க நடவடிக்கை !

வடக்கு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளை வழங்க நடவடிக்கை !

2026-06-30
edit post
இலங்கைக்கு தொடரும் IMF ஆதரவு – பொருளாதார முன்னேற்றத்திற்கு பாராட்டு

இலங்கைக்கு தொடரும் IMF ஆதரவு – பொருளாதார முன்னேற்றத்திற்கு பாராட்டு

2026-06-30
edit post
வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோபுதிய கடற்படைத் தளபதியாக நியமனம்!

வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோபுதிய கடற்படைத் தளபதியாக நியமனம்!

2026-06-30

Recent News

லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷியாமிலா பெரேரா கைது!

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷியாமலா பெரேரா பிணையில் விடுதலை!

2026-06-30
IMF தூதுக்குழுவினர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தனர்

IMF தூதுக்குழுவினர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தனர்

2026-06-30
வடக்கு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளை வழங்க நடவடிக்கை !

வடக்கு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளை வழங்க நடவடிக்கை !

2026-06-30
இலங்கைக்கு தொடரும் IMF ஆதரவு – பொருளாதார முன்னேற்றத்திற்கு பாராட்டு

இலங்கைக்கு தொடரும் IMF ஆதரவு – பொருளாதார முன்னேற்றத்திற்கு பாராட்டு

2026-06-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.