தமிழகத்தின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பாளரும், தொழில்துறை புரட்சியாளருமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் எதிர்வரும்17ஆம் திகதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
நடிகர் ஆர். மாதவன் ஜி.டி. நாயுடுவாக இளமை மற்றும் முதுமை என இரண்டு மாறுபட்ட தோற்றங்களில் நடித்துள்ளார்.
‘ஓஹோ எந்தன் பேபி’ படப்புகழ் இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்க, மாதவனே இதற்கான திரைக்கதையையும் எழுதியுள்ளார்.
சத்யராஜ், ஜெயராம், பிரியாமணி உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளமே இதில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப உலகில் இந்தியா தடம் பதிப்பதற்கு முன்பே எதிர்காலத்தைக் கணித்த ஒரு மேதையின் போராட்டங்களைச் சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவின் பின்னணியில் விவரிக்கும் வரலாற்று நாடகமாக உருவாகியுள்ளது.
நொஜிக்களுடனும் ஜெர்மனியுடனும் கூட்டு சேர்ந்து பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகத் தொழில் செய்கிறார் என ஜி.டி. நாயுடு மீது தேசத்துரோகக் குற்றம் சுமத்தி, அவரது கண்டுபிடிப்புகளையும் தொழில் வளர்ச்சியையும் முடக்க ஆங்கிலேய அரசு முயல்கிறது.
அதை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதே கதை.
‘ராக்கெட்ரி’ படத்திற்குப் பின்னர் வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் மாதவனின் ட்ரைகலர் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன.
கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
வட இந்தியா மற்றும் கர்நாடகப் பகுதிகளில் கரண் ஜோஹரின் ‘தர்மா புரொடக்ஷன்ஸ்’ இதனை விநியோகம் செய்கிறது.















