நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் தான் மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளதாக நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இன்று (06) பிற்பகல் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். தனது அமைச்சின் கீழ் உள்ள ஒரு நிறுவனத்தில் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றமைக்கு அதன் பொறுப்பை தான் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இருப்பினும், தற்போதைய நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், எவருடைய உயிரும் பறிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்:
நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த கொடூரமான மோதலால் தாம் மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்துள்ளேன்.அத்துடன் நீதித்துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற முறையில் இந்த சம்பவத்திற்கு தான் பொறுப்பேற்க வேண்டும். சிறைச்சாலையில் நிலைமை தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் மனித உயிரிழப்புகளை நியாயப்படுத்த முடியாது.மனித உயிரிழப்புகளால் நான் மிகுந்த வருத்தம் அடைகிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.நடந்தது குறித்து அதிகாரிகள் முழுமையாக விசாரித்துஇஇதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுப்பார்கள்.மேலும் எந்தவொரு தனிநபர் மீதும் பழி சுமத்துவதை விட, உண்மைகளைக் கண்டறிவதிலும், இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுப்பதிலுமே தனது கவனம் உள்ளது.












