இந்தியத் திரையுலகின் மிக மூத்த, தலைசிறந்த பின்னணி பாடகியான ‘இசைக்குயில்’ எஸ். ஜானகி , தனது 88 வைத்து வயதில் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
அவரது மறைவுச் செய்தி ஒட்டுமொத்த இந்தியத் திரைத்துறையினரையும், கோடிக்கணக்கான இசை ரசிகர்களையும் பேரதிர்ச்சியிலும் ஆழ்ந்த துயரத்திலும்ழ்த்தியுள்ளது.
கடந்த பல தசாப்தங்களாகத் தனது காந்தக் குரலால் ஒட்டுமொத்த தென்னிந்தியாவையும் கட்டிப்போட்டவர் எஸ். ஜானகி அம்மாள்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஓடியா உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 40,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, இசை உலகில் தனக்கென ஒரு அழியாத சாம்ராஜ்யத்தை அவர் உருவாக்கினார்.
தமிழ் சினிமாவில் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான், வித்யாசாகர் மற்றும் தேவா உள்ளிட்ட பல தலைமுறை இசையமைப்பாளர்களின் இசையில் ஆயிரக்கணக்கான காலத்தால் அழியாத பாடல்களைப் பாடிய பெருமை இவருக்கு உண்டு.
குறிப்பாக, இளையராஜா – எஸ். ஜானகி கூட்டணியில் வெளியான பாடல்கள் இன்றும் ரசிகர்களின் ஆகச்சிறந்த தேர்வூட்டும் பாடல்களாக விளங்குகின்றன.
இசையுலகிற்கு ஆற்றிய பெரும் பங்களிப்பிற்காக இவர் 4 முறை சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதுகளையும், பல்வேறு மாநில அரசுகளின் உயரிய விருதுகளையும் வென்றுள்ளார்.
மழலைக் குரல், காதல், சோகம், துள்ளல் இசை என எந்தவொரு உணர்ச்சியையும் தனது குரல் பாவனையாலேயே அசாத்தியமாக வெளிப்படுத்தும் தனித்துவமிக்க பாடும் ஆளுமையாகத் திகழ்ந்த எஸ். ஜானகி அம்மாவின் மறைவு, இந்திய இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.













