முன்னாள் அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் வழக்கின் மேலதிக விசாரணையை செப்டம்பர் 7 ஆம் திகதி மீண்டும் நடத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (15) உத்தரவிட்டது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷந்த கோடவெல முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இன்றைய விசாரணையின்போது, அரசுத் தரப்பு சாட்சிகள் இருவரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 7 ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.










