33வது ஆசிய பிராந்திய மன்றம் (ARF) மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் நட்பு மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் (TAC) 50வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதற்காக, வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர்விஜித ஹேரத் இன்று (22) பிலிப்பைன்ஸின் மணிலாவை சென்றடைந்தார்.
தனது ‘X’ கணக்கில் பதிவிட்ட அமைச்சர் விஜித ஹேரத், ARF மற்றும் அதன் ஆசிய உறுப்பு நாடுகளுடனான ஆக்கப்பூர்வமான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் இலங்கையின் உறுதிப்பாட்டை இந்த வருகை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்று குறிப்பிட்டார்.
இந்த சந்திப்புகளுக்கு இணையாக, மற்ற பங்கேற்பு நாடுகளின் பிரதிநிதிகளுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்த விரும்புவதாகவும் அமைச்சர் அந்தப் பதிவில் மேலும் குறிப்பிட்டார்.













