நிலவும் மோசமான வானிலை நிலவரத்தைக் கருத்தில் கொண்டு, நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் (A/L) பரீட்சை தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நாளை (05) நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பரீட்சைகள் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் பங்கெடுக்கவுள்ளனர்.
தற்போதைய மழைக்காலச் சூழலில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இக்கலந்துரையாடல் கவனம் செலுத்தும் என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமன்ன தெரிவித்தார்.














