அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை ஆதரித்து, உயர் நீதிமன்றத்தில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
‘நவ சிங்கள உருமய’ (Nava Sihala Urumaya) அமைப்பின் தலைவர் சரத் மனமேந்திரா இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
குறித்த சட்டமூலம் அரசியலமைப்பிற்கு இணங்கவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும், மக்கள் வாக்கெடுப்பு (referendum) இல்லாமலேயே அதனை நிறைவேற்ற முடியும் என்றும் தீர்மானிக்குமாறு இம்மனுவின் மூலம் கோரப்பட்டுள்ளது.













