ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டு நாட்டை விட்டு தப்பிச் சென்ற 236 நபர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்களில், 96 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில், போதைப்பொருள் உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபட்ட 37 நபர்கள் பெப்ரவரி 2025 முதல் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
மேலும், சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் 42 நபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.













