நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளினால் ஏற்பட்ட சேதங்களிலிருந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு 4 முதல் 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை தேவைப்படும் என அந்நாட்டின் நிதியமைச்சர் ஸ்வர்னிம் வாக்லே வெளிநாட்டு ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
இந்தத் தொகையானது நேபாளத்தின் மொத்தப் பொருளாதாரத்தில் (GDP) கிட்டத்தட்ட பத்தில் ஒரு பங்காகும்.
இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட பனியாறு சரிவினால் நேபாளம் மற்றும் திபெத்தியப் பிராந்தியங்களில் 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 2,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
நாட்டின் பல பகுதிகளில் பாலங்கள், வீதிகள் மற்றும் முக்கிய நீர்மின் நிலையங்கள் கடுமையாகச் சேதமடைந்து முற்றாக அழிந்துள்ளன.
நாட்டின் மொத்த தேசிய மின் உற்பத்தியில் 12 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை வழங்கும் நீர்மின் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், நேபாளம் கடுமையான எரிசக்தி மற்றும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.
அத்துடன், நாட்டின் பொருளாதாரத்தின் முதன்மைத் தூண்களான சுற்றுலா மற்றும் நீர்மின் துறைகளுக்கு இந்தப் பேரழிவு பாரிய அடியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்பட்ட இழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்த முறையான மதிப்பீட்டுப் பணிகள் இன்னமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இருப்பினும், 9,000 பேரின் உயிர்களைப் பலிகொண்டு 9 பில்லியன் டொலருக்கும் அதிகமான சேதத்தை ஏற்படுத்திய 2015 ஆம் ஆண்டைய பாரிய நிலநடுக்கப் பேரழிவை விட, இம்முறை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான செலவு குறைவாகவே இருக்கும் என எதிர்பார்ப்பதாக நிதியமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
















