• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
காஸாவின் பாடசாலைகள் மீது தாக்குதல் : 80 பேர் பலி

காஸாவின் பாடசாலைகள் மீது தாக்குதல் : 80 பேர் பலி

Kavipriya S by Kavipriya S
2023/11/19
in உலகம், பிரதான செய்திகள், முக்கிய செய்திகள்
69 0
A A
0
30
SHARES
990
VIEWS
Share on FacebookShare on Twitter

இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் ஒரு மாதத்துக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது.

ஹமாஸ் அமைப்பு நிர்வகித்து வரும் காசாமுனை பகுதி, இஸ்ரேலின் தாக்குதலில் நிர்மூலமாகி இருக்கிறது.

காசாவில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வான்வழி தாக்குதலில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன. மேலும் வடக்கு காசாவுக்குள் இஸ்ரேல் இராணுவம் தரை வழியாக புகுந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

ஹமாஸ் அமைப்பினர் பதுங்கியுள்ளதாக கூறி அகதிகள் முகாம், பாடசாலைகள் மீதும் இஸ்ரேல் இராணுவம் வான்வழி தாக்குதல் நடத்துகிறது.

இந்த நிலையில் இரண்டு பாடசாலைகள் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஜபாலியா அகதிகள் முகாமில் ஐ.நா. சபை நடத்தும் அல்-பகுரா பாடசாலையில் ஏராளமானோர் தஞ்சம் அடைந்து இருந்தனர். இந்த பாடசாலை மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசின.

இதில் அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் 50 பேர் பலியானதோடு. ஏராளமானோர் காயம் அடைந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு வைத்தியசாலைகளில் சேர்த்தனர்.

அதே போல் வடக்கு காசாவின் தால்-அல்-ஜாதார் பகுதியில் உள்ள பாசாலை மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதற்கிடையே பாடசாலைகள் மீதான தாக்குதலில் இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு காசாவின் மிகப்பெரிய அகதிகள் முகாமான ஜபா லியா முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 200 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா. நடத்தும் பாடசாலை மீது தாக்குதல் நடத்தப்பட்டது போர்க்குற்றம் என்றும் ஐ.நா. சபையை திட்டமிட்டு அவமதிக்கும் செயல் என்றும் எகிப்து கண்டனம் தெரிவித்துள்ளது.

வடக்கு காசாவின் மிகப்பெரிய வைத்தியசாலையான அல்-ஷிபாவுக்குள் இஸ்ரேல் இராணுவம் புகுந்து சோதனை நடத்தியது. ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருந்ததாக கூறி அதிரடி நடவடிக்கை எடுத்தது.

இதற்கிடையே அல்-ஷிபா வைத்தியசாலையில் இருந்து நோயாளிகள், மருந்துவ ஊழியர்களை வெளியேறுமாறு இஸ்ரேல் இராணுவம் உத்தரவிட்டது என்றும் இதனால் வைத்தியசாலையில் இருந்து பலர் வெளியேறி வருவதாகவும் தகவல் வெளியானது.

ஆனால் வைத்தியசாலையில் மக்களை வெளியேற உத்தரவிடவில்லை என்று இஸ்ரேல் தெரிவித்தது. வைத்தியசாலையின் இயக்குனரின் கோரிக்கையை ஏற்று பொதுமக்கள் வைத்தியசாலையில் இருந்து வெளியேற அனுமதித்தாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அவர்கள் தாமாக முன்வந்து வெளியேறுகிறார்கள் என்று தெரிவித்து இருக்கிறது.

அல்-ஷிபா வைத்தியசாலையில் மின்சாரம் இல்லை, தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் திணறி வருகிறார்கள். அந்த வைத்தியசாலை, மரண மண்டலமாக மாறி வருகிறது என்று உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

Related

Tags: Israeli attack on Gaza school
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது Celebrity Edge

Next Post

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி பணிகள் மீண்டும் ஆரம்பம்!

Related Posts

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தடைந்தார்
இலங்கை

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தடைந்தார்

2026-03-31
எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து அமைச்சரவையில் ஆராய்வு
இலங்கை

நாளையதினம் முதல் விநியோகத்தில் அதிரடி மாற்றம்!

2026-03-31
மண்டைதீவு மனிதப் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு!
இலங்கை

மண்டைதீவு மனிதப் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு!

2026-03-31
போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பினை பேணிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்!
இலங்கை

பல உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

2026-03-31
பயணிகள் கட்டணத்தை உயர்த்துவதற்கு ஹீத்ரோ விமான நிலையத்தின் முன்மொழிவு நிராகரிப்பு!
இங்கிலாந்து

பயணிகள் கட்டணத்தை உயர்த்துவதற்கு ஹீத்ரோ விமான நிலையத்தின் முன்மொழிவு நிராகரிப்பு!

2026-03-31
மட்டக்களப்பில் நடந்தது என்ன? கடத்தப்பட்ட பெண் விவரித்த அந்த பயங்கர நிமிடங்கள்!
இலங்கை

மட்டக்களப்பில் நடந்தது என்ன? கடத்தப்பட்ட பெண் விவரித்த அந்த பயங்கர நிமிடங்கள்!

2026-03-31
Next Post
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி பணிகள் மீண்டும் ஆரம்பம்!

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி பணிகள் மீண்டும் ஆரம்பம்!

இலங்கையுடனான பங்காளிப்பை அமெரிக்கா தொடர்ந்தும் மதிக்கும் – சமந்தா பவர்

இலங்கையுடனான பங்காளிப்பை அமெரிக்கா தொடர்ந்தும் மதிக்கும் - சமந்தா பவர்

எம்.பிக்கள் மீது பாயும் புதிய சட்டம்!

எம்.பிக்கள் மீது பாயும் புதிய சட்டம்!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தடைந்தார்

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தடைந்தார்

0
எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து அமைச்சரவையில் ஆராய்வு

நாளையதினம் முதல் விநியோகத்தில் அதிரடி மாற்றம்!

0
மண்டைதீவு மனிதப் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு!

மண்டைதீவு மனிதப் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு!

0
போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பினை பேணிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்!

பல உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

0
பயணிகள் கட்டணத்தை உயர்த்துவதற்கு ஹீத்ரோ விமான நிலையத்தின் முன்மொழிவு நிராகரிப்பு!

பயணிகள் கட்டணத்தை உயர்த்துவதற்கு ஹீத்ரோ விமான நிலையத்தின் முன்மொழிவு நிராகரிப்பு!

0
ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தடைந்தார்

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தடைந்தார்

2026-03-31
எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து அமைச்சரவையில் ஆராய்வு

நாளையதினம் முதல் விநியோகத்தில் அதிரடி மாற்றம்!

2026-03-31
மண்டைதீவு மனிதப் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு!

மண்டைதீவு மனிதப் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு!

2026-03-31
போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பினை பேணிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்!

பல உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

2026-03-31
பயணிகள் கட்டணத்தை உயர்த்துவதற்கு ஹீத்ரோ விமான நிலையத்தின் முன்மொழிவு நிராகரிப்பு!

பயணிகள் கட்டணத்தை உயர்த்துவதற்கு ஹீத்ரோ விமான நிலையத்தின் முன்மொழிவு நிராகரிப்பு!

2026-03-31

Recent News

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தடைந்தார்

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தடைந்தார்

2026-03-31
எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து அமைச்சரவையில் ஆராய்வு

நாளையதினம் முதல் விநியோகத்தில் அதிரடி மாற்றம்!

2026-03-31
மண்டைதீவு மனிதப் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு!

மண்டைதீவு மனிதப் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு!

2026-03-31
போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பினை பேணிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்!

பல உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

2026-03-31
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.