சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளையும் (செவ்வாய்கிழமை) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வடமேற்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அலுவலகம் இதனை அறிவித்துள்ளது.
இதேவேளை புத்தளம் மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் இன்றும் விசேட விடுமுறை வழங்கப்பட்டிருந்தது
மேலும் புத்தளம் மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதுடன் புத்தளம் மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.















