• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
புதிய விமான நிலையத்தை எங்கு அமைப்பது?- விஜய்க்கு அண்ணாமலை கேள்வி

புதிய விமான நிலையத்தை எங்கு அமைப்பது?- விஜய்க்கு அண்ணாமலை கேள்வி

Ilango Bharathy by Ilango Bharathy
2025/01/21
in இந்தியா, தமிழகம், முக்கிய செய்திகள்
69 1
A A
0
30
SHARES
996
VIEWS
Share on FacebookShare on Twitter

புதிய விமான நிலையத்தை சென்னையில் எங்குதான் அமைப்பது? என  நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய்யிடம் தமிழக பா.ஜனதா கட்சியின்  தலைவர் அண்ணாமலை,  கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னைக்கு அருகில் உள்ள பரந்தூரில் புதிய விமான நிலையத்தை  அமைப்பதற்காக தங்களது விளைநிலங்களை அரசு கையகப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் கடந்த 900 நாட்களுக்கு மேலாகப்  போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் நேற்று ( 20) பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது உரையாற்றிய விஜய்  ‘கிட்டத்தட்ட 910 நாட்களுக்கும் மேல் உங்கள்  மண்ணுக்காக போராடிக்கொண்டு இருக்கிறீர்கள். உங்கள் எல்லோருடனும் நான் நிற்பேன். தொடர்ந்து நிற்பேன். நமது நாட்டுக்கு மிகவும் முக்கியமானவர்கள் விவசாயிகள்தான்.  அதனால் விவசாயிகளின் காலடி மண்ணைத் தொட்டு வணங்கிவிட்டுத்தான் தன்னுடைய பயணத்தைத் தொடங்க வேண்டும் என்ற ஒரு முடிவோடு இருந்தேன்.  அதற்கு சரியான இடம் இதுதான்.  ‘என்னுடைய கள அரசியல் பயணம் உங்களின் ஆசீர்வாதத்தோடு இங்கிருந்துதான் தொடங்குகிறது.

தவெக-வின் முதல் மாநில மாநாட்டில் கட்சியின் கொள்கைகளை எல்லாம் எடுத்துக் கூறினேன். அதில் ஒன்றுதான் இயற்கை வளப்பாதுகாப்பு. ‘காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரபரப்பளவில் 13 நீர்நிலைகளை அழித்து சென்னையை நிரந்தரமாக வெள்ளக்காடாக்கும் இந்த திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்று அப்போதே வலியுறுத்தினேன்.’

இந்த மண்ணுக்காகவும் மக்களுக்காகவும், விவசாயிகளைப் பாதிக்கும் இந்த திட்டத்துக்கு எதிராக, சட்டப்போராட்டம் நடத்தவும் தயங்கமாட்டோம் என்று கூறியிருந்தோம், அதை மீண்டும் உங்கள் முன்பாக மிகவும் உறுதியாக வலியுறுத்துகிறேன்.

இந்நிலையில் விஜய் தெரிவித்த கருத்துக்கள்  தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இது குறித்து தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் ”இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் வெறும் 1,000 ஏக்கரில் மட்டும் சென்னை விமான நிலையம் இருக்கிறது.

டெல்லி 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பிலும்,  ஐதராபாத் 5 ஆயிரம் ஏக்கர் நிலப் பரப்பிலும்,  பெங்களூரு 4 ஆயிரம் ஏக்கர் நிலப் பரப்பிலும்  விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு 2.50 கோடி பயணிகளை சென்னை விமான நிலையம் கையாள்கிறது. அடுத்த 10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 10 கோடியாகும். பிரதமர் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 2014-ம் ஆண்டு வரையில் 73 விமான நிலையங்கள்தான் இருந்தது.

இன்றைக்கு விமான நிலையங்கள் எண்ணிக்கை 158 ஆக உயர்ந்திருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, சென்னைக்கு புதிய விமான நிலையம் வேண்டும் என்று கேட்டார்.

ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. 2019-ம் ஆண்டு மத்திய அரசுக்கு அனுப்பிய பட்டியலில் பரந்தூர், மாமண்டூர் ஆகிய 2 ஊரின் பெயர்கள் இடம் பெற்றது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் மாமண்டூரை விட்டுவிட்டு பரந்தூர், பன்னூர் ஆகிய 2 ஊரின் பெயர்களை அனுப்பினார்கள்.

அ.தி.மு.க.இ தி.மு.க. அரசு அனுப்பிய 2 பட்டியலிலும் பரந்தூர் இருந்தது. மத்திய அரசு தானாக வந்து பரந்தூரில் விமான நிலையத்தை அமைக்க முடிவு எடுக்கவில்லை. விஜய் ஒரு பொறுப்பான அரசியல்வாதியாக இருக்க வேண்டும் என்றால் அவர் அடுத்து எந்த இடத்தை பரிந்துரை செய்வார்.

சென்னை அருகில் விமான நிலையம் அமைக்க 3 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் வேண்டும். எந்த இடத்தை தேர்வு செய்வது என்ற தீர்வையும் தரவேண்டும். ஆக்கப்பூர்வமாக பிரச்சினையை கையாண்டு அதற்கு தீர்வு கொடுப்பவர்கள்தான் நல்ல அரசியல்வாதியாக வர முடியும்.

விஜய் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்ற போகிறாரா? அல்லது நெருப்பை அணைத்துவிட்டு தீர்வை கொடுக்கப்போகிறாரா? என்பதுதான் முக்கியம். இந்த விவகாரத்தில் மத்திய அரசை குற்றம் சொல்வது தவறு’ இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Related

Tags: டெல்லிதமிழக வெற்றிக்கழகம்புதிய விமான நிலையம்விஜய்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இரு அமெரிக்கர்களுக்கு ஈடாக காவலில் இருந்த ஆப்கான் கைதி விடுவிப்பு!

Next Post

சிட்னியில் யூத சிறுவர் பராமரிப்பு நிலையம் மீது தாக்குதல்!

Related Posts

நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகத்தின் பணி இடைநீக்கம்
இலங்கை

நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகத்தின் பணி இடைநீக்கம்

2026-01-27
இந்தியா- ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து!
இந்தியா

இந்தியா- ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து!

2026-01-27
ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவினால் சத்தியாக்கிரகப் போராட்டம்
இலங்கை

ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவினால் சத்தியாக்கிரகப் போராட்டம்

2026-01-27
இந்தியாவில் நிபா வைரஸ் பரவல்: ஆசிய நாடுகளின் விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம்!
இந்தியா

இந்தியாவில் நிபா வைரஸ் பரவல்: ஆசிய நாடுகளின் விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம்!

2026-01-27
ஊழலை ஊக்குவிப்பதற்காகவே  எதிர்கட்சிகள்   ஒன்று கூடுகின்றன
இந்தியா

உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய பிரதமர் மோடி அழைப்பு!

2026-01-27
கினிகத்தேனையில் விசேட சோதனை; சேவையிலிருந்து நீக்கப்பட்ட 12 வாகனங்கள்!
இலங்கை

கினிகத்தேனையில் விசேட சோதனை; சேவையிலிருந்து நீக்கப்பட்ட 12 வாகனங்கள்!

2026-01-27
Next Post
சிட்னியில் யூத சிறுவர் பராமரிப்பு நிலையம் மீது தாக்குதல்!

சிட்னியில் யூத சிறுவர் பராமரிப்பு நிலையம் மீது தாக்குதல்!

ட்ரம்ப் வழங்கிய பதவியைத் துறந்தார் விவேக் ராமசாமி!

ட்ரம்ப் வழங்கிய பதவியைத் துறந்தார் விவேக் ராமசாமி!

அரசியலமைப்பு நீதிமன்ற விசாரணையில் கலந்து கொண்ட தென்கொரிய ஜனாதிபதி!

அரசியலமைப்பு நீதிமன்ற விசாரணையில் கலந்து கொண்ட தென்கொரிய ஜனாதிபதி!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகத்தின் பணி இடைநீக்கம்

நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகத்தின் பணி இடைநீக்கம்

0
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்த கனேடிய உயர்ஸ்தானிகர்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்த கனேடிய உயர்ஸ்தானிகர்!

0
முன்னாள் அமைச்சர் பி. ஹரிசன்  நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வெளியேறினார்!

முன்னாள் அமைச்சர் பி. ஹரிசன் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வெளியேறினார்!

0
கணக்காய்வாளர் நாயகம் நியமனம் தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்!

கணக்காய்வாளர் நாயகம் நியமனம் தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்!

0
அக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம்

அக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம்

0
நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகத்தின் பணி இடைநீக்கம்

நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகத்தின் பணி இடைநீக்கம்

2026-01-27
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்த கனேடிய உயர்ஸ்தானிகர்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்த கனேடிய உயர்ஸ்தானிகர்!

2026-01-27
முன்னாள் அமைச்சர் பி. ஹரிசன்  நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வெளியேறினார்!

முன்னாள் அமைச்சர் பி. ஹரிசன் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வெளியேறினார்!

2026-01-27
கணக்காய்வாளர் நாயகம் நியமனம் தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்!

கணக்காய்வாளர் நாயகம் நியமனம் தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்!

2026-01-27
அக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம்

அக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம்

2026-01-27

Recent News

நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகத்தின் பணி இடைநீக்கம்

நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகத்தின் பணி இடைநீக்கம்

2026-01-27
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்த கனேடிய உயர்ஸ்தானிகர்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்த கனேடிய உயர்ஸ்தானிகர்!

2026-01-27
முன்னாள் அமைச்சர் பி. ஹரிசன்  நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வெளியேறினார்!

முன்னாள் அமைச்சர் பி. ஹரிசன் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வெளியேறினார்!

2026-01-27
கணக்காய்வாளர் நாயகம் நியமனம் தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்!

கணக்காய்வாளர் நாயகம் நியமனம் தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்!

2026-01-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.