• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
புதிய விமான நிலையத்தை எங்கு அமைப்பது?- விஜய்க்கு அண்ணாமலை கேள்வி

புதிய விமான நிலையத்தை எங்கு அமைப்பது?- விஜய்க்கு அண்ணாமலை கேள்வி

Ilango Bharathy by Ilango Bharathy
2025/01/21
in இந்தியா, தமிழகம், முக்கிய செய்திகள்
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

புதிய விமான நிலையத்தை சென்னையில் எங்குதான் அமைப்பது? என  நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய்யிடம் தமிழக பா.ஜனதா கட்சியின்  தலைவர் அண்ணாமலை,  கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னைக்கு அருகில் உள்ள பரந்தூரில் புதிய விமான நிலையத்தை  அமைப்பதற்காக தங்களது விளைநிலங்களை அரசு கையகப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் கடந்த 900 நாட்களுக்கு மேலாகப்  போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் நேற்று ( 20) பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது உரையாற்றிய விஜய்  ‘கிட்டத்தட்ட 910 நாட்களுக்கும் மேல் உங்கள்  மண்ணுக்காக போராடிக்கொண்டு இருக்கிறீர்கள். உங்கள் எல்லோருடனும் நான் நிற்பேன். தொடர்ந்து நிற்பேன். நமது நாட்டுக்கு மிகவும் முக்கியமானவர்கள் விவசாயிகள்தான்.  அதனால் விவசாயிகளின் காலடி மண்ணைத் தொட்டு வணங்கிவிட்டுத்தான் தன்னுடைய பயணத்தைத் தொடங்க வேண்டும் என்ற ஒரு முடிவோடு இருந்தேன்.  அதற்கு சரியான இடம் இதுதான்.  ‘என்னுடைய கள அரசியல் பயணம் உங்களின் ஆசீர்வாதத்தோடு இங்கிருந்துதான் தொடங்குகிறது.

தவெக-வின் முதல் மாநில மாநாட்டில் கட்சியின் கொள்கைகளை எல்லாம் எடுத்துக் கூறினேன். அதில் ஒன்றுதான் இயற்கை வளப்பாதுகாப்பு. ‘காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரபரப்பளவில் 13 நீர்நிலைகளை அழித்து சென்னையை நிரந்தரமாக வெள்ளக்காடாக்கும் இந்த திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்று அப்போதே வலியுறுத்தினேன்.’

இந்த மண்ணுக்காகவும் மக்களுக்காகவும், விவசாயிகளைப் பாதிக்கும் இந்த திட்டத்துக்கு எதிராக, சட்டப்போராட்டம் நடத்தவும் தயங்கமாட்டோம் என்று கூறியிருந்தோம், அதை மீண்டும் உங்கள் முன்பாக மிகவும் உறுதியாக வலியுறுத்துகிறேன்.

இந்நிலையில் விஜய் தெரிவித்த கருத்துக்கள்  தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இது குறித்து தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் ”இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் வெறும் 1,000 ஏக்கரில் மட்டும் சென்னை விமான நிலையம் இருக்கிறது.

டெல்லி 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பிலும்,  ஐதராபாத் 5 ஆயிரம் ஏக்கர் நிலப் பரப்பிலும்,  பெங்களூரு 4 ஆயிரம் ஏக்கர் நிலப் பரப்பிலும்  விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு 2.50 கோடி பயணிகளை சென்னை விமான நிலையம் கையாள்கிறது. அடுத்த 10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 10 கோடியாகும். பிரதமர் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 2014-ம் ஆண்டு வரையில் 73 விமான நிலையங்கள்தான் இருந்தது.

இன்றைக்கு விமான நிலையங்கள் எண்ணிக்கை 158 ஆக உயர்ந்திருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, சென்னைக்கு புதிய விமான நிலையம் வேண்டும் என்று கேட்டார்.

ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. 2019-ம் ஆண்டு மத்திய அரசுக்கு அனுப்பிய பட்டியலில் பரந்தூர், மாமண்டூர் ஆகிய 2 ஊரின் பெயர்கள் இடம் பெற்றது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் மாமண்டூரை விட்டுவிட்டு பரந்தூர், பன்னூர் ஆகிய 2 ஊரின் பெயர்களை அனுப்பினார்கள்.

அ.தி.மு.க.இ தி.மு.க. அரசு அனுப்பிய 2 பட்டியலிலும் பரந்தூர் இருந்தது. மத்திய அரசு தானாக வந்து பரந்தூரில் விமான நிலையத்தை அமைக்க முடிவு எடுக்கவில்லை. விஜய் ஒரு பொறுப்பான அரசியல்வாதியாக இருக்க வேண்டும் என்றால் அவர் அடுத்து எந்த இடத்தை பரிந்துரை செய்வார்.

சென்னை அருகில் விமான நிலையம் அமைக்க 3 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் வேண்டும். எந்த இடத்தை தேர்வு செய்வது என்ற தீர்வையும் தரவேண்டும். ஆக்கப்பூர்வமாக பிரச்சினையை கையாண்டு அதற்கு தீர்வு கொடுப்பவர்கள்தான் நல்ல அரசியல்வாதியாக வர முடியும்.

விஜய் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்ற போகிறாரா? அல்லது நெருப்பை அணைத்துவிட்டு தீர்வை கொடுக்கப்போகிறாரா? என்பதுதான் முக்கியம். இந்த விவகாரத்தில் மத்திய அரசை குற்றம் சொல்வது தவறு’ இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Related

Tags: டெல்லிதமிழக வெற்றிக்கழகம்புதிய விமான நிலையம்விஜய்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இரு அமெரிக்கர்களுக்கு ஈடாக காவலில் இருந்த ஆப்கான் கைதி விடுவிப்பு!

Next Post

சிட்னியில் யூத சிறுவர் பராமரிப்பு நிலையம் மீது தாக்குதல்!

Related Posts

வெளிநாட்டு மருத்துவர்களுக்கான தேசிய சுகாதார சேவையின்  பணி நியமனங்கள்  இரத்து !
இங்கிலாந்து

வெளிநாட்டு மருத்துவர்களுக்கான தேசிய சுகாதார சேவையின் பணி நியமனங்கள் இரத்து !

2026-07-31
சைப்ரஸில் உள்ள பிரித்தானிய படைத்தளத்தை உளவு பார்த்த நபரை நாடு  கடத்த தீர்மானம்!
இங்கிலாந்து

சைப்ரஸில் உள்ள பிரித்தானிய படைத்தளத்தை உளவு பார்த்த நபரை நாடு கடத்த தீர்மானம்!

2026-07-31
உலகின் மிகப்பெரிய திறந்த மூல செயற்கை நுண்ணறிவு மாதிரி சீனாவிலிருந்து இலவசமாக கிடைக்கிறது!
உலகம்

உலகின் மிகப்பெரிய திறந்த மூல செயற்கை நுண்ணறிவு மாதிரி சீனாவிலிருந்து இலவசமாக கிடைக்கிறது!

2026-07-31
24 மணி நேரத்தில் 49,000 புலம்பெயர்ந்தோர் நுழைவு; ஸ்பெயின் எல்லையில் பெரும் பரபரப்பு!
உலகம்

24 மணி நேரத்தில் 49,000 புலம்பெயர்ந்தோர் நுழைவு; ஸ்பெயின் எல்லையில் பெரும் பரபரப்பு!

2026-07-31
இராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்!
இலங்கை

இராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்!

2026-07-31
கல்வான் மோதலுக்குப் பின்னர் சீன ஜனாதிபதி இந்தியா விஜயம்?
இந்தியா

கல்வான் மோதலுக்குப் பின்னர் சீன ஜனாதிபதி இந்தியா விஜயம்?

2026-07-31
Next Post
சிட்னியில் யூத சிறுவர் பராமரிப்பு நிலையம் மீது தாக்குதல்!

சிட்னியில் யூத சிறுவர் பராமரிப்பு நிலையம் மீது தாக்குதல்!

ட்ரம்ப் வழங்கிய பதவியைத் துறந்தார் விவேக் ராமசாமி!

ட்ரம்ப் வழங்கிய பதவியைத் துறந்தார் விவேக் ராமசாமி!

அரசியலமைப்பு நீதிமன்ற விசாரணையில் கலந்து கொண்ட தென்கொரிய ஜனாதிபதி!

அரசியலமைப்பு நீதிமன்ற விசாரணையில் கலந்து கொண்ட தென்கொரிய ஜனாதிபதி!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
காரட் – 2026 கடற்படைப் பயிற்சி, தீவிர கடல்சார் செயல்பாடுகள் கட்டத்திற்குள் நுழைகிறது!

காரட் – 2026 கடற்படைப் பயிற்சி, தீவிர கடல்சார் செயல்பாடுகள் கட்டத்திற்குள் நுழைகிறது!

0
ஒலுவில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் பேரிச்சம் பழ அறுவடை

ஒலுவில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் பேரிச்சம் பழ அறுவடை

0
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் மீதான வழக்குகளில் தீர்ப்பு இன்று !

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் – முன்னாள் பொலிஸ் மா அதிபர் புஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை !

0
வெளிநாட்டு மருத்துவர்களுக்கான தேசிய சுகாதார சேவையின்  பணி நியமனங்கள்  இரத்து !

வெளிநாட்டு மருத்துவர்களுக்கான தேசிய சுகாதார சேவையின் பணி நியமனங்கள் இரத்து !

0
சைப்ரஸில் உள்ள பிரித்தானிய படைத்தளத்தை உளவு பார்த்த நபரை நாடு  கடத்த தீர்மானம்!

சைப்ரஸில் உள்ள பிரித்தானிய படைத்தளத்தை உளவு பார்த்த நபரை நாடு கடத்த தீர்மானம்!

0
காரட் – 2026 கடற்படைப் பயிற்சி, தீவிர கடல்சார் செயல்பாடுகள் கட்டத்திற்குள் நுழைகிறது!

காரட் – 2026 கடற்படைப் பயிற்சி, தீவிர கடல்சார் செயல்பாடுகள் கட்டத்திற்குள் நுழைகிறது!

2026-07-31
ஒலுவில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் பேரிச்சம் பழ அறுவடை

ஒலுவில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் பேரிச்சம் பழ அறுவடை

2026-07-31
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் மீதான வழக்குகளில் தீர்ப்பு இன்று !

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் – முன்னாள் பொலிஸ் மா அதிபர் புஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை !

2026-07-31
வெளிநாட்டு மருத்துவர்களுக்கான தேசிய சுகாதார சேவையின்  பணி நியமனங்கள்  இரத்து !

வெளிநாட்டு மருத்துவர்களுக்கான தேசிய சுகாதார சேவையின் பணி நியமனங்கள் இரத்து !

2026-07-31
சைப்ரஸில் உள்ள பிரித்தானிய படைத்தளத்தை உளவு பார்த்த நபரை நாடு  கடத்த தீர்மானம்!

சைப்ரஸில் உள்ள பிரித்தானிய படைத்தளத்தை உளவு பார்த்த நபரை நாடு கடத்த தீர்மானம்!

2026-07-31

Recent News

காரட் – 2026 கடற்படைப் பயிற்சி, தீவிர கடல்சார் செயல்பாடுகள் கட்டத்திற்குள் நுழைகிறது!

காரட் – 2026 கடற்படைப் பயிற்சி, தீவிர கடல்சார் செயல்பாடுகள் கட்டத்திற்குள் நுழைகிறது!

2026-07-31
ஒலுவில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் பேரிச்சம் பழ அறுவடை

ஒலுவில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் பேரிச்சம் பழ அறுவடை

2026-07-31
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் மீதான வழக்குகளில் தீர்ப்பு இன்று !

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் – முன்னாள் பொலிஸ் மா அதிபர் புஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை !

2026-07-31
வெளிநாட்டு மருத்துவர்களுக்கான தேசிய சுகாதார சேவையின்  பணி நியமனங்கள்  இரத்து !

வெளிநாட்டு மருத்துவர்களுக்கான தேசிய சுகாதார சேவையின் பணி நியமனங்கள் இரத்து !

2026-07-31
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.