சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களை மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஹம்பாந்தோட்டை நாகரவெவ பறவைகள் சரணாலய உரிமையாளரை, எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர் கடந்த 17 ஆம் திகதி நாரஹேன்பிட்ட பகுதியில் வைத்து பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டார்.
இதேவேளை, நாட்டிற்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 21 மோட்டார் சைக்கிள்கள் சமீபத்தில் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் மீட்கப்பட்டதுடன் குறித்த மோட்டார் சைக்கிள்கள் ஒவ்வொன்றின் மதிப்பும் 15 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, பறவைகள் சரணாலய வளாகத்தில் சட்டவிரோதமாக வளர்க்கப்பட் 4 கஞ்சா செடிகள் வளக்கப்பட்டதும் கண்டறியப்பட்டது.
குறித்த விடயம் தொடர்பில் சரணாலயத்தின் மேலாளர் மற்றும் களஞ்சிய கட்டுப்பாட்டாளர் ஆகியோரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
மாத்தறை மற்றும் மித்தெனிய பகுதிகளைச் சேர்ந்த 40 முதல் 50 வயதுடைய சந்தேகநபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.














