சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் தொடர்பான வழக்கில் ஹம்பாந்தோட்டை நகரவெவ பறவைகள் பூங்காவின் உரிமையாளருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஹம்பாந்தோட்டை நகரவெவ பறவைகள் பூங்காவின் உரிமையாளரை பிணையில் விடுவிக்க ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று (30) அவரை முன்னிலைப்படுத்திய போது 2 லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை நகரவெவ பறவைகள் பூங்காவில் இருந்து அண்மையில் தலா ஒன்றரை மில்லியன் ரூபாய் பெறுமதியான 21 மோட்டார் சைக்கிள்கள் சட்டவிரோதமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.














