இது வேறு பகுதிகளில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேக நபர்கள் நேற்று (02) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மீட்டியாகொடை மற்றும் பண்டாரகம பொலிஸ் பிரிவுகளில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள்.
மீட்டியகொடை பொலிஸ் பிரிவின் மாலவென்ன வீதிப் பகுதியில் நேற்று முன்தினம் (01) நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சந்தேக நபர் நேற்று (02) மாலை தலவாக்கலை பொலிஸ் பிரிவில் தலவாக்கலை பொலிஸ் விசேட அதிரடிப் படை அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் லிந்துலை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதேவேளை, ஆகஸ்ட் 21 ஆம் திகதி பண்டாரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போல்கொட பாலத்திற்கு அருகில் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த நபர் நேற்று (02) கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவின் ஹிரான பகுதியில் களுத்துறை குற்றப்பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பாணந்துறை, ஹிரான பகுதியில் வசிக்கும் 23 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.














