மதில் சுவர் கட்டிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் குழு மீது மண் மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாவனெல்ல, அளுத்நுவர, மாணிக்காவ பகுதியில் மதில் சுவர் கட்டிக்கொண்டிருந்த 03 தொழிலார்கள் மீது மண் மேடு சரிந்து விழுந்துள்ளது.
அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் மண்மேடு விழுந்த மூவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.














