• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு பிரிவில் – பாதாள உலகக்குழுவினர் கடமை புரிந்துள்ளனர் – ஜனாதிபதி திட்டவட்டமாக தெரிவிப்பு

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு பிரிவில் – பாதாள உலகக்குழுவினர் கடமை புரிந்துள்ளனர் – ஜனாதிபதி திட்டவட்டமாக தெரிவிப்பு

Lavendran Jananayagan by Lavendran Jananayagan
2025/11/20
in இலங்கை, முக்கிய செய்திகள்
69 1
A A
0
30
SHARES
994
VIEWS
Share on FacebookShare on Twitter

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு பிரிவில் பாதாள உலகக்குழுவினர் கடமை புரிந்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது எந்தவொரு குற்றவாளிக்கும் அரசியல் அடைக்கலம் வழங்காத அரசாங்கமே அரச இயந்தியரத்தை இயக்குவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருட்களிலிருந்து இலங்கை சமூகத்தை விடுவிப்பதை நோக்கமாகக் கொண்ட ‘முழு நாடுமே ஒன்றாக’ என்ற கருப்பொருளில் தேசிய செயற்பாடு, இன்று தங்காலை பொது விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

நாட்டின் இளைஞர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிக்கும் நோக்கில், நாடு முழுவதும் ஒன்பது மாகாணங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அத்துடன் இந்த தேசிய நிகழ்ச்சித்திட்டம் கடந்தா ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி –  “போதைப்பொருள் கடத்தல் மூலம் அதிகளவான நிதி ஈட்டப்படுகின்றது.
திட்டமிடப்பட்டு குற்றச்செயல்களில் ஈடுபடும் பாதாள உலக்குழுவினர்அரசியல் தலைவர்களின் அடைக்கலத்தில் வாழ்கின்றனர். அவர்களுக்கு அதிகாரம் வழங்கியது யார்??? போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மற்றும் பாதாள உலகக்குழுவினர் இந்த நாட்டில் அரசியல் அடைக்கலம் மூலமே பாதுகாக்கப்பட்டு வந்துள்ளனர்.அதுதான் உண்மை .ஒரு காலகட்டத்தில் அரசியல் கட்சிகளின் மத்தியசெயற்குழுக்களின் அதிகாரம் பாதாள உலகக்குழுக்களின் வசம் காணப்பட்டது. அதேபோல் ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவில் பாதாள உலகக்குழுவினர் அடங்கியிருந்தனர்.

நாம் இந்த இடத்தில் உறுதிபட ஒரு விடயத்தினை தெரிவித்துக்கொள்கின்றோம். எந்தவொரு குற்றவாளிக்கும் அரசியல் அடைக்கலம் வழங்காத அரசாங்கம் ஒன்றே ஆட்சியில் உள்ளது. எந்தவொரு போதைப்பொருள் குற்றவாளிக்கும் அரசியல்அடைக்கலம் வழங்கப்படமாட்டாது. மக்கள் எமக்கு ஆணை வழங்கியுள்ளனர்.இதில் மக்களின் எதிர்ப்பார்ப்பு தங்கியுள்ளது எனவே தலைவர்கள் என்ற ரீதியில் மக்களின் அபிலாஷைகளையும் எதிர்ப்பார்ப்புக்களையும் பூர்த்தி செய்யவேண்டிய பாரிய பொறுப்பு எமக்கு உள்ளது

அதனாலேயே நாம்போதைப்பொருள் தேசிய வேலைத்திட்டத்தினை ஆரம்பித்துள்ளோம். ஆனால் இன்று சிலர் அதனை முடக்குவதற்கு முயற்சிக்கின்றனர்.அனைவரும் ஒரு இலக்கினை நோக்கிபயணிக்கும் போது அவர்கள் இந்த சமுதாயத்தினை திசை திருப்புவதற்கு முயற்சிக்கின்றனர். ஆனால் அந்த வலையில் நாட்டு மக்கள் சிக்கமாட்டார்கள்.

நாம் இந்த திட்டத்தினை மேலும் விரிவுபடுத்துவோம். போதைப்பொருள் மோசடியை நாம் இந்த நாட்டில் இருந்து முற்றாக ஒழிப்போம். இந்த செயற்பாடுகளில் பணியாற்றும் ஒவ்வொருவரையும் நாம் பாதுகாப்போம். அவர்களுக்காக நாம் முன்னிற்போம். நேற்று இரவும் போதைப்பொருளுடன் மீன்பிடிபடகொன்று கைப்பற்றப்பட்டுள்ளது.அந்த மீன்பிடி படகு இன்றுஇரவு கரைக்குகொண்டுவரப்படும்.கடற்படையினர் நாட்டின் கடற்பிராந்தியங்களில் போதைப்பொருள் கடத்தலைமுறியடிப்பதற்கு பாரியளவில் ஒத்துழைப்பு வழங்கிவருகின்றனர். இதேவேளை போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்திற்கு எதிராக பலர் பல சூழ்ச்சிதிட்டங்களை மேற்கொண்டுவருகின்றனர்.அரசாங்கத்தின் இந்த இலக்கை முறியடிப்பதே அவர்களின் நோக்கமாக அதற்காக மக்கள் எதிர்ப்பு பேரணிகள் போராட்டங்களும் ஏற்பாடு செய்யப்படலாம்.

 

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யட்டியாந்தோட்டை பிரதேச சபை வரவுசெலவுத் திட்டம் தோல்வி!

Next Post

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

Related Posts

இந்த ஆண்டிற்கான கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்தல் தொடர்பில் விசேட அறிவித்தல்
இலங்கை

இந்த ஆண்டிற்கான கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்தல் தொடர்பில் விசேட அறிவித்தல்

2026-01-14
இலங்கை

திருகோணமலை புத்தர் சிலை வழக்கு; பலாங்கொடை கஸ்ஸப தேரர் உட்பட 04 பிக்குகளுக்கு விளக்கமறியல்!

2026-01-14
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்தது
கொழும்பு

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்தது

2026-01-14
மீண்டும் நம்பர் 1 வீரராக மாறினார் விராட் கோலி!
ஆசிரியர் தெரிவு

மீண்டும் நம்பர் 1 வீரராக மாறினார் விராட் கோலி!

2026-01-14
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!
ஆசிரியர் தெரிவு

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
தைப்பொங்கலை வரவேற்க தயாராகி வரும் மலையக மக்கள்
மலையகம்

தைப்பொங்கலை வரவேற்க தயாராகி வரும் மலையக மக்கள்

2026-01-14
Next Post
பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறங்கிய எமிரேட்ஸ் விமானம்!

கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறங்கிய எமிரேட்ஸ் விமானம்!

தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் கடத்தல் படகு; மேலதிக விபரம்!

தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் கடத்தல் படகு; மேலதிக விபரம்!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
இந்த ஆண்டிற்கான கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்தல் தொடர்பில் விசேட அறிவித்தல்

இந்த ஆண்டிற்கான கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்தல் தொடர்பில் விசேட அறிவித்தல்

0

திருகோணமலை புத்தர் சிலை வழக்கு; பலாங்கொடை கஸ்ஸப தேரர் உட்பட 04 பிக்குகளுக்கு விளக்கமறியல்!

0
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்தது

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்தது

0
மீண்டும் நம்பர் 1 வீரராக மாறினார் விராட் கோலி!

மீண்டும் நம்பர் 1 வீரராக மாறினார் விராட் கோலி!

0
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

0
இந்த ஆண்டிற்கான கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்தல் தொடர்பில் விசேட அறிவித்தல்

இந்த ஆண்டிற்கான கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்தல் தொடர்பில் விசேட அறிவித்தல்

2026-01-14

திருகோணமலை புத்தர் சிலை வழக்கு; பலாங்கொடை கஸ்ஸப தேரர் உட்பட 04 பிக்குகளுக்கு விளக்கமறியல்!

2026-01-14
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்தது

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்தது

2026-01-14
மீண்டும் நம்பர் 1 வீரராக மாறினார் விராட் கோலி!

மீண்டும் நம்பர் 1 வீரராக மாறினார் விராட் கோலி!

2026-01-14
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14

Recent News

இந்த ஆண்டிற்கான கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்தல் தொடர்பில் விசேட அறிவித்தல்

இந்த ஆண்டிற்கான கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்தல் தொடர்பில் விசேட அறிவித்தல்

2026-01-14

திருகோணமலை புத்தர் சிலை வழக்கு; பலாங்கொடை கஸ்ஸப தேரர் உட்பட 04 பிக்குகளுக்கு விளக்கமறியல்!

2026-01-14
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்தது

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்தது

2026-01-14
மீண்டும் நம்பர் 1 வீரராக மாறினார் விராட் கோலி!

மீண்டும் நம்பர் 1 வீரராக மாறினார் விராட் கோலி!

2026-01-14
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.