வரலாற்று சிறப்புமிக்க நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தில் இந்தியாவின் பீகார் மாநில அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஸ்ரீ நாராயண் பிரசாத் உள்ளிட்ட குழுவினர் நேற்று வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இதன் போது குறித்த ஆலயத்திற்கு வருகை தந்த குழுவினரை பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் கெளரவித்தார்.
பீகார் மாநிலத்தின் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஸ்ரீ நாராயணன் பிரசாத் இந்த விஜயம் தொடர்பாக இவ்வாறு கருத்து தெரிவித்தார் ,
இராமயனயாத்திரை என்பது இராமபிரான் அவதரித்த அய்யோத்தி சீதையன்னை பூமியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சீத்தாமருகே இனனைத்ததாகும் அன்னை ஜானகி பிறந்த இடத்தில் பிரமாண்டமான கோயில் கட்டப்பட்டு வருகிறது .
அய்யோத்தியில் தசரத சக்கரவர்த்தியின் புதல்வர்கலான இராமனும் லட்சுமணனும் வனவாசம் சென்ற போது இராவணனால் அன்னை சீதை கடத்தி செல்லப்பட்டு இலங்கையில் உள்ள அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்டார்.
இது தொடர்பாக சனாத்னி கங்கா மன்றத்தின் தலைவர் பிரவீன் குமார் இவ்வாறு கருத்து தெரிவித்தார்
இந்த வரலாற்று பாதையை சுற்றுலா தலமாக விரிவாக்கம் செய்யப்பட வேண்டும் வரலாற்று பாதையினை இந்தியா மற்றும் இலங்கைக்கான உறவை மேம்படுத்தி பிற நாடுகளுக்கும் இடையில் உள்ள சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க முடியும் என்பதே எனது நோக்கமாகும் என தெரிவித்தார்.












