தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், வரும் 26, 27 ஆகிய திகதிகளில் சென்னை வருகை தருகிறார்
தமிழக சட்டசபை தேர்தல் களம் பரபரத்துக் கொண்டிருக்கிறது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் மார்ச் 6 ஆம் திகதி தமிழ்நாட்டில் 6 இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தல் நடத்தப்பட இருக்கிறது
இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், சென்னையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள், மாவட்டங்களின் தேர்தல் அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
ஏற்கனவ, இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, எதிர்வரும் சட்டமன்ற பொது தேர்தல் 2026 முன்னிட்டு, மாவட்டங்களில் வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது மற்றும் வாக்கினை உறுதி செய்வது குறித்து செயல்முறை விளக்கங்களை மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் 23 ஆம் திகதி வெளியிடப்பட உள்ளது.














