எதிர்வரும் மே மாதம் 7-ஆம் திகதி நடைபெறவுள்ள வேல்ஸ் நாடாளுமன்ற (Senedd) தேர்தலானது, தனது கட்சிக்கும் ரிஃபார்ம் (Reform UK) கட்சிக்கும் இடையிலான நேரடிப் போராட்டம் என (Plaid Cymru’s ) பிளைட் கம்ரி தலைவர் ரன் அப் இயோர்வர்த் தெரிவித்துள்ளார்.
ரிஃபார்ம் கட்சிக்கு வேல்ஸ் மீது எவ்வித விசுவாசமும் இல்லை எனச் சாடிய (Plaid Cymru’s ) பிளைட் கம்ரி தலைவர் , அக்கட்சி ஆட்சிக்கு வந்தால் வேல்ஸை பல தசாப்தங்கள் பின்னோக்கித் தள்ளிவிடும் என எச்சரித்துள்ளார்.
“முன்னாள் கன்சர்வேடிவ் உறுப்பினர்களைக் கொண்ட ரிஃபார்ம் uk கட்சி வேல்ஸை ஒரு இருண்ட பாதைக்கு அழைத்துச் செல்லும் எனவும் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் வேல்ஸின் நாடாளுமன்ற அதிகாரங்களுக்கு (Devolution) எதிராகத் திரும்புவார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 2023-இல் தலைவராகப் பொறுப்பேற்றது முதல், பிளைட் கம்ரி தலைவர் தனது கட்சியின் கவனத்தைத் தனி நாடு (சுதந்திரம்) என்ற கோரிக்கையிலிருந்து விலக்கி, ஒரு நடைமுறைச் சாத்தியமான அரசை அமைப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக, 2021-இல் அறிவிக்கப்பட்ட சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பு மற்றும் 2035-க்குள் நிகர பூச்சிய கார்பன் வெளியேற்றம் போன்ற கொள்கைகளை அவர் தற்போது கைவிட்டுள்ளார்.
இந்நிலையில் இம்முறை வேல்ஸ் தேர்தல் புதிய விகிதாசார பிரதிநிதித்துவ முறையில் (Proportional Voting System) நடைபெறவுள்ளது.
அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 60-லிருந்து 96-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் 6 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர் . அத்துடன்
எந்தவொரு தனிப்பட்ட கட்சியும் பெரும்பான்மை பெறுவது கடினம் என்பதால், பிளைட் கம்ரி ஒரு சிறுபான்மை அரசை அமைக்கத் திட்டமிட்டுள்ளமைகுறிப்பிடத்தக்கது.













