மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய இராணுவத் தாக்குதல்களையும், அதற்குப் பதிலடியாக ஈரான் மேற்கொண்டு வரும் தாக்குதல்களையும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டேரஸ் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
நேற்று நடைபெற்றுள்ள இராணுவ தீவிரப்பாடுகள் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளன.
எந்தவொரு நாட்டின் அரசியல் சுதந்திரம் அல்லது பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராக அச்சுறுத்தல் விடுப்பதையோ அல்லது பலத்தைப் பயன்படுத்துவதையோ ஐக்கிய நாடுகள் சாசனம் தெளிவாகத் தடை செய்கிறது. அனைத்து உறுப்பு நாடுகளும் அதனை மதிக்க வேண்டும்.
இந்தநிலையில், மோதல்களை உடனடியாக நிறுத்தி, பதற்றத்தைத் தணிக்க வேண்டும் என அவர் அனைத்துத் தரப்பினரையும் வலியுறுத்தியுள்ளார்.
தவறும் பட்சத்தில், இது பொதுமக்களுக்கும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கும் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு பெரிய போராக மாறக்கூடும்.
அத்துடன் சர்வதேச மோதல்களைத் தீர்க்க அமைதி வழி மற்றும் பேச்சுவார்த்தையைத் தவிர வேறு சிறந்த மாற்று வழி எதுவுமில்லை என்றுஅந்தோனியோ குட்டேரஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.














