16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதை மாநில அரசு தடை செய்யும் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இன்று (06) அறிவித்துள்ளார்.
கர்நாடக சட்டமன்றத்தில் 2026–27 மாநில வரவு-செலவுத் திட்டத்தை அவர் தாக்கல் செய்து கொண்டிருந்தபோது இந்த அறிவிப்பு வெளியானது.
சுமார் 4.20 இலட்சம் கோடி இந்திய ரூபாய் மதிப்பிலான இந்த பட்ஜெட், பெங்களூரு மற்றும் பிற பின்தங்கிய பகுதிகளில் நலத்திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறுவர்கள் மத்தியில் அதிகப்படியான ஸ்மார்ட்போன் மற்றும் சமூக ஊடக பயன்பாடு குறித்த அதிகரித்து வரும் கவலைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்த முன்மொழியப்பட்ட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக சித்தராமையா கூறினார்.
16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்களை அணுகுவதை ஒழுங்குபடுத்தும் யோசனை கர்நாடக அரசாங்கத்திற்குள் சிறிது காலமாக விவாதத்தில் இருந்து வந்த நிலையில் முதல்வரின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.



















