லண்டனின் சில செல்வந்தர்கள் நிறைந்த பகுதிகளில், வெள்ளையர்களை விட கறுப்பின மக்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு 48 மடங்காக அதிகரித்துள்ளதாக ஒரு புதிய அறிக்கை கண்டறிந்துள்ளது.
கறுப்பின மக்களை சர்ச்சைக்குரிய அதிகாரத்திற்கு உட்படுத்துவதற்கு அதிகாரிகள் கூறும் காரணங்கள் தெளிவற்றதாக உள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வானது லண்டன் மேயர் சாதிக் கானின் காவல் மற்றும் குற்றங்களுக்கான அலுவலகத்தால் நியமிக்கப்பட்டு லண்டன் கிங்ஸ் கல்லூரியால் நடத்தப்பட்டது.
இது லண்டனில் மேற்கொள்ளப்பட்ட 152,000 நபர்களை சோதனை செய்த 2023 ஆம் ஆண்டு தரவுகளையும், காவல்துறையினர் அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டியிருந்ததாகக் கூறிய நியாயமான காரணங்களையும் ஆய்வு செய்தது.
குறிப்பாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் வெள்ளையர்களை விட கறுப்பின மக்கள் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்படுவதற்கான வாய்ப்பு நான்கு மடங்காக இருந்ததாகவும், மெட் நகரத்தைப் பொறுத்தவரை இது 3.7 மடங்கு அதிகமாக இருந்ததாகவும் அந்த ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.











