ஈரானின் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலானது அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் மற்றும் ஏனைய அணுசக்தி பாதுகாப்பு விதிமுறைகள் உள்ளிட்ட சர்வதேச சட்டங்களையும் அர்ப்பணிப்புகளையும் மீறும் செயலாகும் என ஈரான் அணுசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
யுத்தத்தின் முதல் வாரத்திலும் இந்த நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்ததுடன், அக்காலப்பகுதியில் பெறப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்களின் அடிப்படையில் அங்கிருந்த சில கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
















