பிரதமர் அலுவலகத்தின் நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்த ‘நட்புறவு புத்தாண்டு விழா’, நேற்றுதி பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த பிரதமர்:
‘அனைவருக்கும் துன்பங்கள் அற்ற, அமைதியான, இனிய புத்தாண்டாக அமைய வேண்டுமென வாழ்த்துகின்றேன். அத்தோடு, நீங்கள் அர்ப்பணிப்புடன் ஆற்றிவரும் கடமைகளையும் வழங்கிவரும் ஆதரவையும் பாராட்டுகின்றேன். இந்நாட்டு மக்களுக்காகப் பிரதமர் அலுவலகம் முன்னெடுக்க வேண்டிய சேவைகளை மென்மேலும் நேர்த்தியாக ஆற்றுவதற்கான வலிமையும் உறுதியும் கிடைக்க வேண்டுமெனப் பிரார்த்திக்கின்றேன்’ எனத் தெரிவித்தார்.
பிரதமர் அலுவலகத்தின் நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட, நாட்டுப்புற விளையாட்டுகளையும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளையும் உள்ளடக்கிய இந்த ‘நட்புறவு புத்தாண்டு விழா’ நாள் முழுவதும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி அவர்கள் உட்படப் பிரதமர் அலுவலகத்தின் மேலதிக செயலாளர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.















