பாதுக்க, அங்கம்பிட்டிய பகுதியில் வீதியோரக் கால்வாய் ஒன்றில் விழுந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டு, பாதுக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் அங்கம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய ஒருவராவார்.
இந்த மரணம் வீதி விபத்தினால் தான் நிகழ்ந்தது என்பதற்கான சான்றுகளோ அல்லது தகவல்களோ இதுவரை வெளியாகவில்லை.
இதன் காரணமாக, இதனை ஒரு சந்தேகத்திற்கிடமான மரணமாகக் கருதி மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் நீதவான் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காக சடலம் தற்போது அவிசாவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பாதுக்க பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.













