நியூசிலாந்தின் பூர்வீக மாவோரி சமூகத்தின் ராணியை மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் பக்கிங்ஹாம் அரண்மனையில் சந்தித்துப் பேசினார்.
தனது தந்தை கிங்கி துஹெய்தியாவின் (Kiingi Tuheitia) மரணத்தைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டில் மாவோரி ராணியான பின்னர், தே அரிகினுய் (Te Arikinui) பிரிட்டிஷ் மன்னரை சந்தித்தது இதுவே முதல் முறையாகும்.
இந்த சந்திப்பு நியூசிலாந்தின் ஸ்தாபக ஆவணங்களில் ஒன்றான வைடாங்கி உடன்படிக்கையில் முறைப்படுத்தப்பட்ட நியூசிலாந்தின் பழங்குடி மக்களுக்கும் ஐக்கிய இராஜ்ஜியத்தின் அரசிற்கும் இடையிலான ஏறத்தாழ 200 ஆண்டுகால உறவைக் குறிக்கிறது.
இந்த வாரத் தொடக்கத்தில் மாவோரி சமூகத்தினரின் ராணியை வின்ட்சர் கோட்டையில் இளவரசர் வில்லியம் வரவேற்றார்.
இந்த சந்திப்பின் போது, ராணி தே அரிகினுய், இளவரசர் வில்லியமுடன் பல்வேறு உலகளாவிய தலைப்புகள் குறித்து விவாதித்ததாக மாவோரி அரசாட்சி இயக்கமான கிங்கிடாங்கா (Kīngitanga) வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
மேலும், உலகின் சுற்றுச்சூழல் மற்றும் சமூக சவால்களைத் தீர்க்க உதவுவதில், பழங்குடி அறிவின் ஆற்றல் மற்றும் தலைமுறை தலைமுறையாகத் தொடரும் பொறுப்புணர்வின் மீதான தனது நம்பிக்கையை தே அரிகினுய் இதன்போது உறுதிப்படுத்திதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

















