உக்ரேனிய இளைஞர்கள் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் நடவடிக்கைகள் தொடர்பில், தனது சிறுவர் பராமரிப்பு நிலையம் ஒன்றின் மீது ஐக்கிய இராச்சியம் விதித்த தடைகளுக்கு வட கொரியா இன்று (15) கண்டனம் வெளியிட்டது.
மேலும் பிரிட்டன், வடகொரியாவின் நற்பெயரைக் கெடுக்கவும், ரஷ்யாவுடனான அதன் உறவுகளைச் சீர்குலைக்கவும் முயல்வதாகவும் அது குற்றம் சாட்டியது.
2022 ஆம் ஆண்டில் ரஷ்யா, உக்ரேன் மீது படையெடுத்ததிலிருந்து, மொஸ்கோ ஆக்கிரமிப்புப் பகுதிகளைச் சேர்ந்த உக்ரேனிய சிறுவர்கள் அரசியல் சித்தாந்தப் போதனைக்கு உள்ளாக்கப்படுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
அங்கு, அவர்களுக்கு ஜப்பானிய இராணுவவாதிகளை அழித்தொழிப்பது எப்படி என்று கற்பிக்கப்பட்டதாகவும், 1968 ஆம் ஆண்டில் அமெரிக்க கடற்படைக் கப்பல் மீது தாக்குதல் நடத்தி ஒன்பது அமெரிக்க வீரர்களைக் கொன்று காயப்படுத்திய கொரியப் படைவீரர்களை அவர்கள் சந்தித்ததாகவும் அந்த அறிக்கை தெரிவித்தது.
வெளிவிவகார அலுவலகத்தின் தகவலின்படி, உக்ரேனியக் குழந்தைகளைக் கட்டாயமாக நாடு கடத்துதல் மற்றும் மறு கல்வி கற்பித்தல் என்ற ரஷ்யாவின் திட்டத்தில் அந்த முகாம் ஈடுபட்டு ஆதரவளிப்பதாக சந்தேகப்படுவதாகக் கூறி பிரிட்டன் கடந்த மே 11 அன்று சோங்டோவோன் (Songdowon) நிலையம் மீது சொத்து முடக்கத் தடைகளை விதித்தது.
உக்ரேனின் பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை அல்லது சுதந்திரத்தை சீர்குலைக்கும் அல்லது அச்சுறுத்தும் கொள்கைகள் அல்லது நடவடிக்கைகளுக்கு இந்த நிலையம் ஆதரவளிப்பதாகவும் பிரிட்டன் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த நிலையல், இத்தகைய நடவடிக்கைகள் ரஷ்யாவை அரக்கத்தனமாக சித்தரிப்பதற்கான சதித்திட்ட நகர்வுகள் என்றும், வடகொரியாவுக்கு சகித்துக்கொள்ள முடியாத அவமானம் என்றும் பியோங்யாங்கின் அரசுக்குச் சொந்தமான கொரிய மத்திய செய்தி நிறுவனம் இன்று கூறியது.















