• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தையிட்டி பவானி வீதி தொடர்பான நீதிமன்ற கட்டளை இன்று – எதிர்பார்ப்புக்களுடன் காணி உரிமையாளர்கள்!

தையிட்டி பவானி வீதி தொடர்பான நீதிமன்ற கட்டளை இன்று – எதிர்பார்ப்புக்களுடன் காணி உரிமையாளர்கள்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/21
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான வீதியினை மீட்கும் முகமாக வீதிக்கு குறுக்காக அமைக்கப்பட்டுள்ள வேலியை வலி, வடக்கு பிரதேச சபையினர் அகற்ற அனுமதிப்பதா ? தடை விதிப்பதா என்பது தொடர்பிலான கட்டளை இன்றைய தினம் (021) மல்லாகம் நீதவான் நீதிமன்று வழங்கவுள்ளது.

விகாரை அமைந்துள்ள பகுதிக்குள் வலி. வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான “பவானி” வீதி காணப்படுகிறது.

குறித்த வீதியினை விடுவிக்கும் நோக்குடன் கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி வீதி அளவீடு செய்யப்பட்டது.

அதனை அடுத்து குறித்த வீதியை மறித்து அடைக்கப்பட்டுள்ள வேலியை விகாராதிபதி அகற்ற வேண்டும் எனவும் , தவறும் பட்சத்தில் பிரதேச சபை வேலியை அகற்றும், வேலியை அகற்றும் செலவீனத்தை விகாராதிபதி பிரதேச சபைக்கு வழங்க வேண்டும் என தவிசாளர் கடிதம் மூலம் விகாராதிபதிக்கு அறிவித்து இருந்தார்.

அதனை அடுத்து பிரதேச சபை விகாரை வேலியை அடாத்தாக அகற்ற முற்படுவதாக பலாலி பொலிஸ் விகாராதிபதி முறைப்பாடு செய்திருந்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் , தவிசாளரை பலாலி பொலிஸார் அழைத்து, வேலியை அகற்றினால் , இனங்களுக்கு இடையில் பிரச்சனைகள் ஏற்பட்டு , நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படும் எனவே வேலியை அகற்றும் பணிகளை கைவிட வேண்டும் என அச்சுறுத்தும் தொனியில் கூறியுள்ளனர்.

அதற்கு தவிசாளர், மறுப்பு தெரிவித்து , பிரதேச சபைக்கு சொந்தமான வீதியை விகாராதிபதியே அடாத்தாக கையகப்படுத்தி வைத்திருப்பதாகவும் , வீதியை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம் என உறுதியாக கூறி இருந்தார்.

அந்நிலையில் கடந்த 08ஆம் திகதி வலி . வடக்கு பிரதேச சபை வீதியை மீட்கும் பணியை கைவிட வேண்டும் என்றும் , அதற்கு எதிராக நீதிமன்று தடையுத்தரவு வழங்க வேண்டும் என பலாலி பொலிஸார் மல்லாகம் நீதிமன்றில் மனு தாக்கல் செய்தனர்.

குறித்த மனு மீதான விசாரணையின் போது, ஒரு தலைப்பட்சமாக விசாரணை செய்ய முடியாது என கூறிய மன்று , வலி. வடக்கு தவிசாளர் மற்றும் பிரதேச சபை செயலாளர் ஆகியோரை கடந்த 11ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுத்திருந்தது.

அதன் பிரகாரம் தவிசாளர் மற்றும் பிரதேச சபை செயலாளர் ஆகியோர் அன்றைய தினம் மன்றில் முன்னிலையான நிலையில் , அவர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் முன்னிலையாகி தமது தரப்பு வாதங்களை முன் வைத்தார்.

அதனை அடுத்து குறித்த வழக்கின் மீதான கட்டளைக்காக இன்றைய தினம் மன்று திகதியிட்டுள்ளது .

குறித்த வீதியை கையகப்படுத்தி , அமைக்கப்பட்டுள்ள வேலியை அகற்றுவதன் ஊடாக , தையிட்டி சட்டவிரோத விகாரைக்காக கையகப்படுத்தப்பட்டுள்ள சில காணிகள் விடுவிக்கப்பட கூடிய ஏது நிலை காணப்படுவதால் , இன்றைய தினம் வழங்கப்படவுள்ள கட்டளை காணி உரிமையாளர்கள் மத்தியில் கடும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது .

Related

Tags: Jaffnasrilanka newsthaiyitti
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழில் சீதனகொடுமையால் பெண் ஒருவர் உயிரிழப்பு!

Next Post

நாட்டின் தேசிய கலைக்கூடத்திலிருந்து 42 பழங்கால ஓவியங்கள் மாயம் – அமைச்சர் சுனில் செனவி தெரிவிப்பு!

Related Posts

நாட்டின் தேசிய கலைக்கூடத்திலிருந்து 42 பழங்கால ஓவியங்கள்  மாயம் – அமைச்சர்  சுனில் செனவி தெரிவிப்பு!
இலங்கை

நாட்டின் தேசிய கலைக்கூடத்திலிருந்து 42 பழங்கால ஓவியங்கள் மாயம் – அமைச்சர் சுனில் செனவி தெரிவிப்பு!

2026-05-21
முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!
இலங்கை

யாழில் சீதனகொடுமையால் பெண் ஒருவர் உயிரிழப்பு!

2026-05-21
யாழில்  பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் அதிக  ஒலி  , வானவேடிக்கை என்பவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை!
இலங்கை

யாழில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் அதிக ஒலி , வானவேடிக்கை என்பவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை!

2026-05-21
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை
இலங்கை

ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான பெண்ணுக்கு 7 வருட கடூழிய சிறை – யாழ் மேல் நீதிமன்றம் அதிரடி!

2026-05-21
கபில சந்திரசேன மரண விவகாரம் – சந்தேக நபர்கள் நான்கு பேரும் பிணையில் விடுதலை!
இலங்கை

கபில சந்திரசேன மரண விவகாரம் – சந்தேக நபர்கள் நான்கு பேரும் பிணையில் விடுதலை!

2026-05-21
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!
அம்பாறை

அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

2026-05-21
Next Post
நாட்டின் தேசிய கலைக்கூடத்திலிருந்து 42 பழங்கால ஓவியங்கள்  மாயம் – அமைச்சர்  சுனில் செனவி தெரிவிப்பு!

நாட்டின் தேசிய கலைக்கூடத்திலிருந்து 42 பழங்கால ஓவியங்கள் மாயம் - அமைச்சர் சுனில் செனவி தெரிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
நாட்டின் தேசிய கலைக்கூடத்திலிருந்து 42 பழங்கால ஓவியங்கள்  மாயம் – அமைச்சர்  சுனில் செனவி தெரிவிப்பு!

நாட்டின் தேசிய கலைக்கூடத்திலிருந்து 42 பழங்கால ஓவியங்கள் மாயம் – அமைச்சர் சுனில் செனவி தெரிவிப்பு!

0
தையிட்டி பவானி வீதி தொடர்பான நீதிமன்ற கட்டளை இன்று – எதிர்பார்ப்புக்களுடன் காணி உரிமையாளர்கள்!

தையிட்டி பவானி வீதி தொடர்பான நீதிமன்ற கட்டளை இன்று – எதிர்பார்ப்புக்களுடன் காணி உரிமையாளர்கள்!

0
முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!

யாழில் சீதனகொடுமையால் பெண் ஒருவர் உயிரிழப்பு!

0
யாழில்  பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் அதிக  ஒலி  , வானவேடிக்கை என்பவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை!

யாழில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் அதிக ஒலி , வானவேடிக்கை என்பவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை!

0
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான பெண்ணுக்கு 7 வருட கடூழிய சிறை – யாழ் மேல் நீதிமன்றம் அதிரடி!

0
நாட்டின் தேசிய கலைக்கூடத்திலிருந்து 42 பழங்கால ஓவியங்கள்  மாயம் – அமைச்சர்  சுனில் செனவி தெரிவிப்பு!

நாட்டின் தேசிய கலைக்கூடத்திலிருந்து 42 பழங்கால ஓவியங்கள் மாயம் – அமைச்சர் சுனில் செனவி தெரிவிப்பு!

2026-05-21
தையிட்டி பவானி வீதி தொடர்பான நீதிமன்ற கட்டளை இன்று – எதிர்பார்ப்புக்களுடன் காணி உரிமையாளர்கள்!

தையிட்டி பவானி வீதி தொடர்பான நீதிமன்ற கட்டளை இன்று – எதிர்பார்ப்புக்களுடன் காணி உரிமையாளர்கள்!

2026-05-21
முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!

யாழில் சீதனகொடுமையால் பெண் ஒருவர் உயிரிழப்பு!

2026-05-21
யாழில்  பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் அதிக  ஒலி  , வானவேடிக்கை என்பவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை!

யாழில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் அதிக ஒலி , வானவேடிக்கை என்பவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை!

2026-05-21
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான பெண்ணுக்கு 7 வருட கடூழிய சிறை – யாழ் மேல் நீதிமன்றம் அதிரடி!

2026-05-21

Recent News

நாட்டின் தேசிய கலைக்கூடத்திலிருந்து 42 பழங்கால ஓவியங்கள்  மாயம் – அமைச்சர்  சுனில் செனவி தெரிவிப்பு!

நாட்டின் தேசிய கலைக்கூடத்திலிருந்து 42 பழங்கால ஓவியங்கள் மாயம் – அமைச்சர் சுனில் செனவி தெரிவிப்பு!

2026-05-21
தையிட்டி பவானி வீதி தொடர்பான நீதிமன்ற கட்டளை இன்று – எதிர்பார்ப்புக்களுடன் காணி உரிமையாளர்கள்!

தையிட்டி பவானி வீதி தொடர்பான நீதிமன்ற கட்டளை இன்று – எதிர்பார்ப்புக்களுடன் காணி உரிமையாளர்கள்!

2026-05-21
முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!

யாழில் சீதனகொடுமையால் பெண் ஒருவர் உயிரிழப்பு!

2026-05-21
யாழில்  பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் அதிக  ஒலி  , வானவேடிக்கை என்பவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை!

யாழில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் அதிக ஒலி , வானவேடிக்கை என்பவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை!

2026-05-21
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.