மஹர மற்றும் கம்பஹா பிரதேச சபை பகுதிகளில் நாளை (27) 12 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது.
அதன்படி, நாளை (27) இரவு 7.00 மணி முதல் மறுநாள் (28) காலை 7.00 மணி வரை நீர் விநியோகம் நிறுத்தப்படும்.
மத்திய அதிவேக நெடுஞ்சாலை கட்டுமானத்துடன் இணைக்கப்பட்ட நீர்க் குழாய்களை இடமாற்றம் செய்வது தொடர்பான அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.














