இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் உயர்த்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, கடந்த பத்து நாட்களில் மாத்திரம் ஐந்து தடவைகள் எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதுடன், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 108 ரூபாய் ஒரு சதத்திற்கும், டீசல் 99 ரூபாய் 78 சதத்திற்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றத்தினால் ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் நூறு டொலர்களை கடந்து வர்த்தகமாகி வருகிறது.
இந்த விலை ஏற்றத்தினால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுகட்டவே எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதாக இந்திய மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிப்பதுடன், இந்த விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.















