இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு, ராஜகிரியவில் அண்மையில் கைது செய்யப்பட்ட சீன பிரஜைக்கு சொந்தமான கடவுச்சீட்டுகளை திருப்பி தருவதற்கு 300,000 ரூபா இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
சந்தேக நபர் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்டறிந்த பின்னர், நீதிவான் சந்தேக நபரை ஜூன் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.














