கொங்கோ ஜனநாயகக் குடியரசு (DRC) மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் மிக அரிய வகை ‘புந்திபுஜியோ’ (Bundibugyo – BVD) எபோலா வைரஸ் தொற்று அதிவேகமாகப் பரவி வருகின்றது.
இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பல உலக நாடுகள் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளையும், எல்லைப் பாதுகாப்பு சோதனைகளையும் தீவிரப்படுத்தியுள்ளன.
கடந்த 15 ஆம் திகதி கொங்கோவில் இந்த எபோலா பரவல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதில் இருந்து, அங்கு இதுவரை 900 சந்தேகிக்கப்படும் தொற்றாளர்களும், 220 உயிரிழப்புகளும் உலக சுகாதார நிறுவனத்தினால் (WHO) பதிவு செய்யப்பட்டுள்ளன.
உகாண்டாவில் இதுவரை ஐந்து பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் ஒரு உயிரிழப்பும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, நிலைமையின் தீவிரத்தைக் கருத்திற்கொண்டு, உலக சுகாதார நிறுவனம் கொங்கோவிற்கான தேசிய அளவிலான ஆபத்து மதிப்பீட்டை ‘அதிகம்’ என்பதிலிருந்து ‘மிகவும் அதிகம்’ (Very High) என்ற நிலைக்குக் கடந்த வாரம் உயர்த்தியது.
எனினும், உலகளாவிய ரீதியில் இதற்கான ஆபத்து இன்னும் குறைவாகவே மதிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, வைரஸைக் கட்டுப்படுத்த பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் அவசர நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள.
கொங்கோ ஜனநாயகக் குடியரசு (DRC)
- எபோலா தொற்றினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள 11 சுகாதார மண்டலங்களில் ஒன்றான கிழக்கு கொங்கோவின் பனியா (Bunia) நகருக்கான அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானச் சேவைகளையும் கொங்கோ போக்குவரத்து அமைச்சு உடனடியாகப் இடைநிறுத்தியுள்ளது.
- எனினும், மனிதாபிமான உதவிகள், மருத்துவ விநியோகங்கள் மற்றும் அவசரக் கால விமானங்களுக்கு மாத்திரம் விமானப் போக்குவரத்து மற்றும் சுகாதார அதிகாரிகளின் சிறப்பு அனுமதியுடன் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
உகாண்டா அரசாங்கம்
- கொங்கோவிலிருந்து உகாண்டாவிற்கு வரும் மற்றும் அங்கிருந்து செல்லும் அனைத்து நேரடி விமானச் சேவைகளும் முற்றாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
- கொங்கோ உடனான எல்லைப் பகுதிகளில் பேருந்து மற்றும் படகுப் போக்குவரத்துகள் அனைத்தும் நான்கு வாரங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
- எல்லை மாவட்டங்களில் வாராந்தம் நடைபெறும் பொதுச் சந்தைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், அத்தியாவசியப் பொருட்கள், உணவு மற்றும் சரக்குக் போக்குவரத்துகளுக்கு (Freight traffic) மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எபோலா வைரஸின் இந்த விசித்திரமான ‘புந்திபுஜியோ‘ திரிபு மற்ற நாடுகளுக்குப் பரவாமல் தடுப்பதற்காக, அண்டை நாடுகளும் சர்வதேச விமான நிலையங்களும் கொங்கோவிலிருந்து வரும் பயணிகளுக்குக் கடுமையான மருத்துவப் பரிசோதனைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் எபோலா வைரஸின் இந்த விசித்திரமான ‘புந்திபுஜியோ’ திரிபு மற்ற நாடுகளுக்குப் பரவாமல் தடுப்பதற்காக, அண்டை நாடுகளும் சர்வதேச விமான நிலையங்களும் கொங்கோவிலிருந்து வரும் பயணிகளுக்குக் கடுமையான மருத்துவப் பரிசோதனைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.













