டெங்கு நோய் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு (NDCU) மூன்று நாள் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளது.
இந்த நடவடிக்கை ஜூன் 8 முதல் ஜூன் 10 வரை 12 மாவட்டங்களில் உள்ள 72 சுகாதார மருத்துவ அலுவலர் (MOH) பிரிவுகளை உள்ளடக்கி நடத்தப்படும்.
ஜூன் 5 ஆம் திகதி நிலவரப்படி நாடு முழுவதும் 36,168 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
இதில் மேற்கு மாகாணத்தில் அதிகபட்ச பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மாத்தறை, காலி, இரத்தினபுர, கேகாலை, புத்தளம் மற்றும் கண்டி மாவட்டங்களிலும் டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
இதற்கிடையில், இந்த ஆண்டு இதுவரை மூன்று குழந்தைகள் உட்பட 20 பேர் டெங்கு தொடர்பான மரணங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.













