2026 ஜனவரி 1 முதல் ஜூன் 16 வரை நாடு முழுவதும் இடம்பெற்ற வீதி விபத்துகளில் மொத்தம் 1,297 பேர் உயிரிழந்துள்ளனர் என இலங்கை பொலிஸார் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர்களில் அதிகமானோர் பாதசாரிகள் ஆவர்.
இக்காலப்பகுதியில் 448 பாதசாரிகள் உயிரிழந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து 444 மோட்டார் சைக்கிள் சாரதிகள் உயிரிழந்துள்ளதால், அவர்கள் இரண்டாவது அதிகம் பாதிக்கப்பட்ட பிரிவாக உள்ளனர்.
மேலும், இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் இடம்பெற்ற வீதி விபத்துகளில்:
- 124 பயணிகள்
- 109 வாகன சாரதிகள்
- 85 துவிச்சக்கர வண்டி சாரதிகள்
- 84 மோட்டார் சைக்கிள் பின்புற பயணிகள்
- 3 ஏனையோர்
உயிரிழந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
வீதி விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளையும் கடுமையான காயங்களையும் குறைப்பதற்காக, வாகன சாரதிகளும் பாதசாரிகளும் அதிக அவதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், போக்குவரத்து விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.















