வெனிசுலாவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் 4 நாட்களுக்குப் பின்னர் லா குய்ரா நகரில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த தந்தையும், மகனும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பிரான்ஸ் மற்றும் அமெரிக்க மீட்புப் படையினர் இணைந்து, பிரத்தியேக கேமராக்கள் மற்றும் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி இவர்களைக் கண்டறிந்துள்ள நிலையில் சுமார் 12 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் அவர்கள் இருவரையும் பத்திரமாக வெளியே எடுத்துள்ளனர்.
மேலும், நீண்ட நாட்கள் அவர்கள் இடிபாடுகளுக்குள் இருந்ததால், இருவரும் கடும் நீர்ச்சத்து குறைபாட்டுடன் சோர்வாகக் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில், தற்போது அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கு முன்பு இதேபோல இடிபாடுகளில் இருந்து ஒரு தாயும், அவரது 9 மாதக் குழந்தையும் உயிருடன் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த மீட்புச் சம்பவங்கள் அங்கு தொடர்ந்து நடைபெறும் சர்வதேச மீட்புப் பணிகளில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன.
இதேவேளை, நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,500-ஐ நெருங்கியுள்ளது.















