எப்பாவல உட்பட பல பகுதிகளில் நீண்ட காலமாக சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த “தோனி” என்ற புனைப்பெயரால் அறியப்பட்ட பெண் ஒருவர் ஹெராயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண், பத்கொலவெட்டிய, எப்பாவலாவைச் சேர்ந்த, இரண்டு பிள்ளைகளின் தாயான சுரேகா திபானி ஆவார்.
எப்பாவ பொலிசார் அப்பெண்ணின் வீட்டில் திடீர் சோதனை நடத்தியதில், அவரிடமிருந்து 2,450 கிராம் ஹெராயின் கைப்பற்றப்பட்டது.
சட்டவிரோத மதுபானக் கடத்தல் வழக்கில் அப்பெண்ணுக்கு 10-க்கும் மேற்பட்ட முந்தைய தண்டனைகள் உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் நேற்று (04) தம்புத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.












