கால்நடைத் தீவனம் தயாரிக்க அரிசி அல்லது நெல்லைப் பயன்படுத்துவதைத் தடை செய்து முன்பு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபை இது குறித்து ஒரு சிறப்பு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, கால்நடைத் தீவன உற்பத்தியில் நேரடியாகப் பயன்படுத்துவதற்காகவோ அல்லது கால்நடைத் தீவனத் தயாரிப்பில் ஒரு மூலப்பொருளாகப் பயன்படுத்துவதற்காகவோ அரிசி அல்லது நெல்லை விற்பனை செய்தல், விற்பனைக்கு வைத்தல், இருப்பு வைத்தல், சேமித்தல், போக்குவரத்து செய்தல், விநியோகித்தல் அல்லது கொள்முதல் செய்தல் ஆகியவற்றிற்கு மீண்டும் அனுமதி வழங்கப்படுகிறது.
இந்த உத்தரவு ஜூன் 24 முதல் நடைமுறையில் உள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.












