பாணந்துறை, வடக்கு கல்கனுவ வீதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் 26 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் சட்டப் பிரிவு மாணவியாகக் கல்வி பயின்று வந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் அந்த வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்ததாகவும், அங்கு தனது கல்வியைத் தொடர்ந்தவாறே ஒரு சட்டத்தரணிகளின் சட்டப் பணிகளுக்கும் உதவி வந்ததாகவும் பொலிஸார் கூறினர்.
இறப்பு தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் சம்பவத்தின் விளைவா என்பதைத் தீர்மானிக்க பாணந்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.











