சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில், நெம்மேலி மற்றும் பேரூரில் நடைபெற்று வரும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகளைத் தமிழக முதலமைச்சர் விஜய் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தினமும் 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட புதிய பேரூர் ஆலையின் கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், நெம்மேலியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைக் குடித்துப் பார்த்த முதலமைச்சர், தற்போதைய ஆலைகளைச் சிறந்த முறையில் பராமரிக்குமாறும் அறிவுறுத்தினார்.
இதேவேளை, இந்த ஆலையின் முகப்பில் இருந்த முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு அகற்றப்பட்டதாகக் கூறி திமுகவினர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், பராமரிப்புப் பணிகளுக்காகவே அது தற்காலிகமாக அகற்றப்பட்டுள்ளதாகத் துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.














